சஞ்சீவ் காலை உணவு உண்ண டைனிங் ரூமிற்கு வந்தப் போது தான் வீட்டில் விருந்தினர் வந்திருப்பதை உணர்ந்தான். அவனைப் பார்த்த காஞ்சனா,
"சஞ்சீவ்... பார்த்தீயா யார் வந்திருக்கான்னு? உங்க மாமாவும், கண்மணியும்..." என்றாள்.
கண்மணியைப் பார்த்து சஞ்சீவ் சிறிது திகைத்து தான் போனான். அவன் அவளைப் பார்த்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகி இருந்தது. அப்போது அவளை சிறு பெண்ணாய் பார்த்தவன் இப்போது அவள் வளர்ந்து அவள் வயதிற்கே உரிய அழகோடு இருப்பதை கண்டு அதிசயித்தான். மனதில் இதை எல்லாம் நினைத்தாலும், அவன் உதடுகள், தானாக விருந்தினரை வரவேற்று உபசரித்தது. அவனின் பார்வையில், கண்மணி லேசாக முகம் சிவந்து வெட்கப் படுவதை பார்த்து அவனுக்கு மேலும் குழப்பமாக இருந்தது. காஞ்சனாவின் ஆசை அவனுக்கும் தெரியும்... இந்த சின்ன பெண்ணிடம் என்னவெல்லாம் சொல்லி வைத்திருக்கிறார்களோ!
எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் கண்மணியிடம், அவளை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தனக்கில்லை என்பதை தெளிவுப் படுத்தி விட வேண்டும் என மனதில் முடிவு செய்துக் கொண்டான் சஞ்சீவ். வழக்கமான பேச்சு இல்லாமல் சஞ்சீவ் அமைதியாக உணவு உண்பதை கண்டும் காணாததுப் போல் கவனித்துக் கொண்டு இருந்தாள் கீதா. காஞ்சனா தன் தம்பியுடன் பல விஷயங்களை பேசியவாறு உணவருந்தினார். அந்த சுழலில் மிகவும் தடுமாறிப் போனது கண்மணி தான். அவளால் தன் அப்பா மற்றும் அத்தையின் பேச்சில் கலந்துக் கொள்ளவும் முடியவில்லை, சஞ்சீவை நேராகப் பார்த்து பேசும் தைரியமும் வரவில்லை! என்ன செய்வது என்று அறியாது உணவை அலைந்து கொண்டிருந்தாள் கண்மணி. அவளைப் புரிந்து கொண்டதுப் போல், கீதா அவளின் படிப்பு பற்றி பேச்செடுக்கவும், கண்மணிக்கு சற்று நிம்மதியாக இருந்தது, மகிழ்ச்சியோடு கீதாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தொடங்கினாள்.
கண்மணியும், அவள் தந்தையும் காலையில் வந்தது முதலே கீதா கண்மணியுடன் பேசிக் கொண்டிருந்தாள் தான். முதலில் விருந்தினரை உபசரிக்க என்று ஆரம்பித்தது, பின் கண்மணியின் அமைதியான அடக்கமான பேச்சில் கவர்ந்து தொடர்ந்தது. கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், கண்மணி புத்திக் கூர்மையுடனே விளங்கினாள். அத்துடன் அவளுக்கு