சில நொடிகளில் இயல்புக்கு வந்தான் பூபதி, என்ன நினைததானோ தன்னிடம் இருந்து ஜீவிதாவை தடாலென விலக்கினான், அதில் அவள் சற்று அதிர சற்றும் யோசிக்காமல் அவளின் ஒரு பக்க கன்னத்தில் விட்டான் ஒரு அறை, அதில் அவளுக்கு பேரதிர்ச்சி ஆனால் அந்த அதிர்ச்சி சில நொடிகள் கூட நிலைக்கவில்லை, அடிபட்ட கன்னத்தை வருடிவிட்டு அவனைப் பார்த்து நாணத்துடன் சிரித்துவிட்டு அங்கிருந்து நாணி கோணி வெளியேறி சென்றாள். அவளின் இந்த செயலால் பூபதிக்கு கோபம் வரவில்லை, என்னடா இவள் என்பது போல நினைத்து தனக்குதானே சிரித்துக் கொண்டான்.
வெளியே வந்த ஜீவிதாவை பிடித்தாள் அன்னம்
”சின்னம்மா என்னம்மா சிரிச்சிக்கிட்டு வர்றீங்க, உங்களை அவன் அடிச்சானே, உங்களுக்கு கோபம் வரலை” என பதட்டமாக கேட்க அதற்கு பொன்னுசாமியும்
”அதானே அவனுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா உங்களை அடிச்சிருப்பான், ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க போதும் அவனை கண்டந்துண்டமா வெட்டி வீசிடறேன்” என பொங்க அவளோ
”ஏன் பொன்னுசாமி இதுவரைக்கும் நீ அன்னத்தை அடிச்சதில்லையா”
“ஏன் அடிக்கலை நிறைய முறை அடிச்சிருக்கேன்”
”எந்த உரிமையில அடிச்ச”
”என் பொஞ்சாதிங்கற உரிமையில அடிச்சேன்” என சொல்லிவிட்டு சட்டென வாயை அவசரமாக பொத்திக் கொண்டான் பொன்னுசாமி
அன்னத்திற்கு புரிந்துப் போனது அவரோ
”ஓஹோ அப்படி போதா கதை சரி சரி” என சொல்ல அதில் ஜீவிதா இன்னும் வெட்கப்பட்டு அங்கிருந்து துள்ளிக் குதித்து ஓடிவிட அன்னமோ பொன்னுசாமியை பார்த்து
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.