(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

நகைச்சுவை உணர்வும் இருந்தது. கலாவும் கீதாவும் வழக்கம் போல் தங்கள் கலகலப்பான பேச்சுடன் காலை உணவு தயாரித்தப் போது, கண்மணியாலும் அவர்களின் பேச்சில், எளிதாக இணைந்துக் கொள்ள முடிந்தது. கீதாவிற்கு கண்மணியை பிடித்து தான் இருந்தது. ஒரு வேளை இந்துவும் சஞ்சீவும் மனதுள் ஒருவரை ஒருவர் விரும்புவதை அறிந்திராமல் இருந்தால், கீதாவே சஞ்சீவின் மனதை மாற்ற முயற்சித்திருப்பாள் தான்! இப்போது கண்மணியின் மனம் புண் படாமல் இருக்க வேண்டுமே என்று அவளுக்கு கவலையாக இருந்தது.  

  

டிஃபனை முடித்ததும் ஆஃபீசிற்கு கிளம்பிய சஞ்சீவை யோசனையுடன் பார்த்தாள் காஞ்சனா...

  

"என்ன சஞ்சீவ் இது? மாமாவும் கண்மணியும் வீட்டுக்கு வந்திருக்காங்க... ராஜீவ் தான் ஏதோ முக்கியமான வேலைன்னு கிளம்பிட்டான்.. நீயாவது இருந்து அவங்களை கவனிக்கலாம் தானே?"

  

சஞ்சீவ் பதில் சொல்லும் முன், காஞ்சனாவின் தம்பி ராமமூர்த்தியே பேசினார்.

  

"என்ன அக்கா இது? சஞ்சீவ் எதோ அவசர வேலையா கிளம்புற மாதிரி இருக்கு... எங்களுக்கு எதுக்கு ஸ்பெஷல் கவனிப்பு எல்லாம்? சஞ்சீவ், பரவாயில்லை... அம்மா சொல்றதைப் பத்தி நீ யோசிக்காதே..."

  

"அவசர வேலை எல்லாம் இல்லை, மாமா... இன்னைக்கு ஒரு ஃபிரெண்டுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருந்தேன். அதுக்கு தான் கிளம்பிட்டு இருக்கேன்... சாயங்காலம் சீக்கிரம் வந்திருவேன்... உங்களை அப்படியே வெளியே எங்கேயாவது கூட்டிட்டுப் போறேன்...." என்றான் சஞ்சீவ்.

  

"இல்லை சஞ்சீவ்... நான் இன்னைக்கு மதியமே கிளம்புறேன்... அக்கா தான் கண்மணி இங்கே கொஞ்சம் நாள் தங்கி இருக்கட்டும்னு ஆசைப் படுறாங்க... அவளும் இப்போ காலேஜ் முடிச்சுட்டு சும்மா தானே இருக்காள்... சரி இருக்கட்டும்னு தான் அழைச்சுட்டு வந்தேன்..."

  

"அதெல்லாம் இருக்கட்டும், மூர்த்தி... அப்புறம் பேசிக்கலாம்..." என்று தம்பியிடம் சொன்ன காஞ்சனா, சஞ்சீவிடம்,

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.