🌼🌸❀✿🌷
வீணாவை காத்திருக்க வைக்காது சொன்ன நேரத்திற்கு வந்து விட வேண்டும் என்று இந்து எவ்வளவோ முயன்றப் போதும், அவள் தி.நகரில் இருக்கும் அந்த பிரபல ஜவுளிக் கடையை அடைந்தப் போது சிறிது தாமதமாகி விட்டது. சொன்ன நேரத்திற்கு முன்பே வந்து இருந்த வீணா, இந்துவிற்கு ஃபோன் செய்து புடவைப் பகுதியில் காத்திருப்பதாக தகவல் சொன்னாள்.
ஷாப்பிங் முடித்தப் பின், தான் வீணாவுடன் ஆஃபீஸ் செல்வதாக சொல்லி காரை திருப்பி அனுப்பி வைத்தாள் இந்து. வீணா சொல்லி இருந்த இரண்டாம் மாடியில் இருக்கும் சேலை பகுதிக்கு செல்ல லிஃப்டுக்கு காத்திருக்காது, வேகமாக படி ஏறிய இந்து, இரண்டாம் மாடியின் படி வளைவில் எதிரில் வந்த யாரோ ஒருவறை கவனிக்காமல் சென்று இடித்துக் கொண்டாள். அவள் அவசரமாக படி ஏறி வந்தது நினைவில் இருந்த போதும், அப்படி என்ன கண் மண் தெரியாமல் எதிரில் வருவது என எதிரே இருந்தவரின் மீது எரிச்சலோடு நிமிர்ந்துப் பார்த்தவள், ஒரு வினாடி திகைத்து தான் போனாள். ஏனெனில் அதே போல் எரிச்சலுடன் அவள் முன் நின்றிருந்தது சஞ்சீவ்!
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...