மறுநாள் பொழுது விடிந்தது, வீட்டில் இருந்த அனைவருமே தங்கள் பணிகளை கவனிக்க சென்றார்கள். அசோக் ஏதோ அந்த வீட்டுக்கு உரிமையாளன் போல பொன்னுசாமியையும் அன்னத்தையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தான். அதில் பொன்னுசாமியும் அன்னமும் அமைதியாகி அவன் சொன்ன வேலைகளை செய்யலானார்கள். பூபதிக்கும் அவனே வேலை தந்தான். அதன்படி பூபதி அந்த வீட்டையே சுத்தம் செய்துக் கொண்டிருந்தான். இரவு வெகுநேரம் கழித்து உறங்கியதால் நேரம் கழித்து எழுந்து வந்தாள் ஜீவிதா, வீடு எப்போதும் அமைதியாக இருக்கும் ஆனால் இன்று அசோக்கின் குரல் அதிகமாக கேட்டது, என்னவென பார்த்தாள். அசோக்கோ அன்னம் பொன்னுசாமி பூபதி மூவரையும் கடுமையாக வேலை வாங்கிக் கொண்டிருந்தான், அதில் அவர்களும் கடுப்புடனே வேலை செய்துக் கொண்டிருக்க அதைக்கண்டபடி வந்த ஜீவிதாவோ அசோக்கிடம்
”அசோக் இங்க என்ன நடக்குது, எதுக்காக இவங்களை இப்படி வேலை வாங்கறீங்க”
”ஜீவிதா அவங்க யாரு வேலைக்காரங்கதானே, அவங்க வேலை செய்றது தப்பில்லையே”
”அவங்க வேலையை அவங்க செய்வாங்க, நீங்க எதுக்காக அவங்களை வேலைவாங்கறீங்கன்னு கேட்டேன்”
“ஏன் நான் அவங்களை வேலை வாங்க கூடாதா, எனக்கு அதுல உரிமையில்லையா, உனக்கு யாரை எங்க வைக்கனும்னு தெரியலை, ஒரு வேலைக்காரனை போய் உன் அப்பா இடத்தில வைச்சிப்பார்க்கற அது தப்பு ஜீவிதா, அவங்கவங்களை நாம வைக்க வேண்டிய இடத்தில வைக்கனும், அவங்களுக்குண்டான வேலைகளை பிரிச்சி கொடுத்தேன், அவங்க அதை சரியா செய்றாங்களான்னு கண்காணிக்கிறேன் அவ்ளோதான்” என சொல்ல ஜீவிதாவோ நீண்ட பெருமூச்சுவிட்டு
”அன்னம் போய் சமையல் வேலையை பாருங்க போங்க” என சொல்ல அதில் அன்னம் நிம்மதியாகி சமையல்கட்டுக்குச் சென்றாள் அவசரமாக.
”பொன்னுசாமி இதுக்கு முன்னாடி நீங்க என்ன வேலை செய்தீங்களோ, அதை மட்டும் செய்ங்க, புதுசா எதையம் செய்ய வேணாம் போங்க” என சொல்ல அவரும் விட்டால் போதுமென
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.