தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 09 - சசிரேகா
மறுநாள் பொழுது விடிந்தது, வீட்டில் இருந்த அனைவருமே தங்கள் பணிகளை கவனிக்க சென்றார்கள். அசோக் ஏதோ அந்த வீட்டுக்கு உரிமையாளன் போல பொன்னுசாமியையும் அன்னத்தையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தான். அதில் பொன்னுசாமியும் அன்னமும் அமைதியாகி அவன் சொன்ன வேலைகளை செய்யலானார்கள். பூபதிக்கும் அவனே வேலை தந்தான். அதன்படி பூபதி அந்த வீட்டையே சுத்தம் செய்துக் கொண்டிருந்தான். இரவு வெகுநேரம் கழித்து உறங்கியதால் நேரம் கழித்து எழுந்து வந்தாள் ஜீவிதா, வீடு எப்போதும் அமைதியாக இருக்கும் ஆனால் இன்று அசோக்கின் குரல் அதிகமாக கேட்டது, என்னவென பார்த்தாள். அசோக்கோ அன்னம் பொன்னுசாமி பூபதி மூவரையும் கடுமையாக வேலை வாங்கிக் கொண
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டுக்குச் சென்றாள் அவசரமாக.
”பொன்னுசாமி இதுக்கு முன்னாடி நீங்க என்ன வேலை செய்தீங்களோ, அதை மட்டும் செய்ங்க, புதுசா எதையம் செய்ய வேணாம் போங்க” என சொல்ல அவரும் விட்டால் போதுமென