This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சஞ்சீவை எதிர்பாராமல் அங்கே பார்த்ததில் இந்து முகத்தில் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கலந்து தாண்டவமாடின.
"அது தானே பார்த்தேன்... என்னடா இந்த கடையில நம்ம மேல பூச்செண்டு எல்லாம் வந்து விழுதுன்னு..." என்றான் சஞ்சீவ் கண்கள் மின்ன!
அவன் அவளை பூச்செண்டு என்று சொன்னது இந்துவின் மனதிற்கு இதமாக இருந்தது... ஆனாலும் அதை கவனிக்காததுப் போல காண்பித்துக் கொண்டு, மற்றவருக்கு இடைஞ்சலாக வழியில் நிற்காது ஒதுங்கி நின்றவள்,
"சாரி.... கொஞ்சம் அவசரமா ஸ்டெப்ஸ்ல வந்தேன்... உங்களை கவனிக்கலை..." என்றாள், சற்று முன் ஏற்பட்ட எரிச்சலை மறைத்து.
இந்துவைப் போலவே மற்றவருக்கு வழி விட்டு விட்டு, அவளின் அருகே சிறிது இடை வெளி விட்டு அருகில் நின்றபடி,
"அது சரி, பரவாயில்லை... நீங்க என்ன இங்க இந்த புடவை செக்ஷன்ல? நான் சொன்னதுக்காக வந்தீங்களா?" என்றான் சஞ்சீவ் இந்துவின் முகத்தை ரசித்துக் கொண்டே.
அவன் அருகில் நின்று பேசுவதோடு மட்டும் அல்லாது, அவன் கண்களில் இருந்த ரசனையிலுமாக சிறிது தடுமாறிய இந்து, அதை வெளியில் காட்டாது,
"நீங்க சரியான 'என் பி கே' (N P K)..............." என்றாள்!
"அது என்ன 'என் பி கே' ??????????????"
"ம்ம்ம்ம்... முடிஞ்சா நீங்களே கண்டுப் பிடிச்சுக்கோங்க..."
"அது சரி...! ஆனால், இப்படி இந்து மேடம் தரிசனம் இங்கே டெக்ஸ்டைல் கடையில் கிடைக்கும்ன்னு நான் எதிர்ப்பார்க்கலை... அண்ணி சொன்னதை வச்சு பார்த்தால், ஏதோ நீங்க
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.