சொல்லி முடிக்கும் முன்,
"சஞ்சு... இங்கே என்ன செய்ற?? எவ்வளவு நேரம் நான் உனக்காக வெயிட் பண்றது..." என்றப்படி வந்த ஒரு அழகிய பெண் சஞ்சீவின் கைகளைப் பிடித்து இழுத்தாள்.
"ஒரு நிமிஷம் ரஞ்சி..." என்றவனை இடைமறித்து,
"ப்ளீஸ் சஞ்சு... எனக்கு டைம் ஆச்சு...." என்றாள் அவள்!
ஏற்கனவே அவளின் 'சஞ்சு'விலும், கொஞ்சலிலும் கடுப்பாகி இருந்த இந்து, அவள் நேரம் பற்றி சொல்லவும், அதைப் பிடித்துக் கொண்டு,
"ஆமாம் மிஸ்டர் சஞ்சீவ், எனக்கும் இந்த மாதிரி வெட்டி பேச்சுக்கு எல்லாம் டைம் இல்லை... நான் கிளம்புறேன்..." என்று சொல்லி விட்டு சஞ்சீவை திரும்பியும் பாராது நேராக நடந்தாள்.
பேசிக் கொண்டு இருக்கும் போது அந்த 'ரஞ்சி' தான் நாகரீகம் இல்லாது கையைப் பிடித்து இழுத்தால், அதைப் பற்றி எல்லாம் எதுவும் சொல்லாது, ரஞ்சியாம் ரஞ்சி...
திடீரென யாரோ அவளின் கையைப் பற்றி இழுக்கவும், திடுக்கிட்டு, இந்த உலகத்திற்கு மீண்டும் வந்த இந்து, வீணா குறும்பு புன்னகையுடன் நிற்பதைக் கண்டாள்.
"ம்ம்ம்... கொஞ்சம் முன்னாடி, மாடிப் படி பக்கத்தில் அப்படியே நூறு வாட்ஸ் மின்னல் வெட்டிச்சு... அப்புறம் என்ன திடீர்னு இப்படி ஜீரோ வாட்ஸ் ஆயிடுச்சு?" என்றாள் வீணா கேலியாக!
"ப்ச்... வீணா...."
"ம்ம்ம்... இந்து, உனக்கு கூட பொறாமை எல்லாம் வருமா என்ன? என்ன கோபம்... ம்ம்ம்... எதிரிலே நிக்கிற என்னைக் கூட தெரியலை????"
இந்து எதுவும் சொல்லாது அமைதியாக இருந்தாள்.