(Reading time: 7 - 13 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

"பாவம் இந்து... அந்தப் பொண்ணு... நீ பாட்டுக்கு வந்துட்டியா... சஞ்சீவ் நல்லா டோஸ் விட்டார்ன்னு நினைக்கிறேன்... அவர் ஏதோ சொன்ன உடனே அவள் முகமே வாடி போச்சு... என்னை பார்த்துட்டு சஞ்சீவ் ஒரு ஸ்மைல் பண்ணிட்டு அவளையும் கூட்டிட்டுப் போனார்....."

  

"ஒ!!" என்றாள் இந்து குழப்பத்துடன்.

  

தோழியின் முகத்தை பார்த்த வீணாவிற்கு சிரிப்பு வந்தது.

  

"இந்து, கவலை படாதே... இதெல்லாம் லவ்ல ரொம்ப சகஜம்... சஞ்சீவே வந்து சமாதான படுத்துவான்...."

  

"லவ்வா????"

  

"இல்லையா???"

  

"அதெல்லாம் ஒன்னும் இல்லை...."

  

"அப்போ சரி விடு... வா நாம நம்ம ஷாப்பிங்க ஆரம்பிப்போம்... இந்த பக்கம் சிந்தெடிக் செக்ஷன்ல ஆரம்பிப்போம் வா..."

  

"அது என்ன நீ சஞ்சீவ அவன் இவன்னு சொல்ற???" தோழியுடன் நடந்தபடி கேட்டாள் இந்து.

  

திரும்பி பார்த்து கண் சிமிட்டிய வீணா,

  

"ஏன்?????" என்றாள்!

  

என்ன சொல்வது என்று சில வினாடிகள் தடுமாறிய இந்து, தோழியின் கேலிப் பார்வையை கண்டு மேலும் தடுமாறினாள். அவளின் முக சிவப்பை கவனித்து விட்டு, புன்னகைத்தப் போதும், அவளை மேலும் தடுமாற செய்ய விரும்பாது,

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.