"சரி, நாம வந்த வேலையை முதல்ல பார்ப்போம்... அப்புறம் இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்..." என்றாள் வீணா.
அதன் பின் இருவரும் அந்த கடையை தலைக் கீழாகப் பிரித்து போட்டு புடவை தேர்ந்து எடுத்தார்கள். பொதுவாக பெண்களுக்கு இருக்கும் ஆர்வம் மட்டும் அல்லாது, தங்களின் பிரியமான தோழிக்கு வாங்குவது சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற ஆர்வ கோளாறினாலும், புடவை எடுத்து காண்பித்த அந்த பெண் விற்பனையாளரை, வாங்கு வாங்கு என வேலை வாங்கினார்கள்! முடிவில் தேர்வு செய்த சேலைகளுடன் கிளம்பும் போது, மறக்காது, அந்த பெண்ணுக்கு ஒரு சாரியும், தேங்க்ஸு-ம் சொல்லி புன்னகைத்து கிளம்பினார்கள்.
பில்லுக்கு பணம் கட்டி விட்டு, ப்ளாஸ்டிக் பைகளுடன் கடையை விட்டு வெளியில் வந்தவர்களுக்கு பசித்தது. அருகில் இருந்த ஜூஸ் கடைக்கு சென்று பழச்சாறு வாங்கி அருந்த தொடங்கினர்.
🌼🌸❀✿🌷
"அப்புறம் இந்து... இப்போ சொல்லலாமே... ஏன் உன்னோட சஞ்சீவை நான் அவன் இவன்னு சொல்ல கூடாதுன்னு...?" என பேச்சை ஆரம்பித்தாள் வீணா!
"ப்ச்... அது என்ன உன்னோடன்னு ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்? அது போகட்டும்... எப்படியும் சஞ்சீவ் உன்னை விட பெரியவர் தானே அப்புறம் என்ன ஏன்னு கேள்வி????"
"ஓஹோ... அது தான் காரணமா? நான் நம்பிட்டேன்....."
வீணா கண் சிமிட்டி கேலி செய்யவும்... முகம் சிவந்த போதும்,
"ம்ம் வீணா... அவினாஷும், ஆன்ட்டியும் பாவம் உன்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடு படுறாங்களோ..." என்றாள் இந்து!