சரியான workaholicன்னுல நினைச்சேன்... நீங்க என்னடான்னா வார நாள்ல இங்கே இந்த நேரத்தில இருக்கீங்க?????"
சும்மா என்று மழுப்பி விடலாமா என்று தோன்றிய எண்ணத்தை உடனே நிராகரித்தாள் இந்து! உண்மையை இவனிடம் சொல்வதில் ஒன்றுமில்லை.
"உங்க அண்ணா, அண்ணிக்கு வெட்டிங் டே வர போகுதுல... அதுக்கு தான் அக்காக்கு சாரி எடுக்கலாம்னு நானும் வீணாவும் வந்தோம்... வீணா வெயிட் பண்ணிட்டு இருப்பாள்...." என்று சொல்லியப்படி வீணாவை கண்களால் தேடினாள் இந்து.
"உங்க ஃபிரெண்டை ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைக்க கூடாது தான்... ஆனாலும் க்யூரியாசிட்டில கேட்குறேன்... அது ஏன் அண்ணிக்கு சாரீ வாங்கி கொடுக்க டிசைட் பண்ணினீங்க?"
"அது..." என்று சிறிது தயங்கிய இந்து, பின்,
"சாரி... தப்பா எடுத்துக்காதீங்க... இது ஒரு சின்ன ரகசியம் ஓகே வா?" என்றாள்!
சஞ்சீவ் சரி என தலை அசைக்கவும், அவளே தொடர்ந்தாள்.
"அக்காக்கு பொதுவா பட்டுப் புடவை விட சிந்தடிக் சாரீஸ், காட்டன் சாரீஸ் தான் பிடிக்கும்... உங்க அம்மாக்கு அது தெரியாது இல்லையா... அவங்க எப்போவும் அக்காக்கு விலை ஜாஸ்த்தியான பட்டு புடவை தான் எடுப்பாங்க... கீதா அக்காவை பத்தி தான் உங்களுக்கும் தெரியுமே... வாயை திறந்து எதுவும் சொல்ல மாட்டாங்க... உங்க அண்ணாக்கும் சாரீஸ் பத்தி அவ்வளவு தெரியாது... அது தான் நாங்க ரெண்டு பேரும் கீதா அக்காக்கு பிடிச்ச மாதிரி சாரீஸ் கிஃப்டாக கொடுக்கலாம்ன்னு பிளான் செய்தோம்... அப்போ யாரையும் ஹர்ட் பண்ணவும் வேண்டாம்... அக்காக்கு பிடிச்ச மாதிரி சாரீஸ் எடுத்துக் கொடுத்த மாதிரியும் ஆச்சு..."
புன்னகை மின்ன சொன்னவளை அதிசயமாக பார்த்தான் சஞ்சீவ்!
"அம்மாடியோவ்... என்ன ஃபிரெண்ட்ஷிப்... எப்படிங்க இது..." மேலும் அவன் கேலியாக ஏதோ