"அப்படியா பாட்டியம்மா... பொதுவா முதல் குழந்தை சீக்கிரம் பெத்துக்கலாம்... அடுத்த குழந்தை வேணா தள்ளி போடலாம்..." என்றார் அர்ச்சனா.
"போங்க அம்மா... நம்ம நாட்டு பாப்புலேஷனுக்கு எல்லாம் அது சரி பட்டு வராது... அதுவும் இதை நீங்க சொல்லவே கூடாது... உங்களுக்கு தெரியுமா கீதாக்கா? எங்க அம்மா அப்பாக்கு கல்யாணமாகி மூணு வருஷம் கழிச்சு தான் நான் பிறந்தேன்..." என்றாள் இந்து.
அவளின் பேச்சின் பிற்பாதியில், அர்ச்சனாவின் முகம் சற்று மாறியது. அதை மூன்று தோழிகளுமே கவனிக்க தான் செய்தார்கள். அதற்கு காரணம் அப்பாவை பற்றிய தன் பேச்சினால் இருக்க கூடும் என ஊகித்த இந்து, அவளே தொடர்ந்துப் பேசினாள்.
"ஆனால், இந்த விஷயத்துல என்னைப் பத்தி கவலையே படாதீங்க... எனக்கு கல்யாணமாகி ஒரு வருஷம் முடியுறதுக்கு முன்னாடியே நான் குழந்தை பெத்துப்பேன் பா..."
இந்துவின் பேச்சின் காரணம் புரிந்ததால்,
"ஓஹோ, அப்படியா!!! அதை தான் நாங்களும் பார்க்க தானே போறோம்..." என்று வீணாவும் சொன்னாள்.
அவர்கள் எதிர்பார்த்ததுப் போலவே அர்ச்சனாவின் முகமும் இப்போது தெளிந்திருந்தது.
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...