“எங்கே தான் ரெக்கமெண்டேஷன் இல்லை? டாக்டர் பிரசாத் இந்த ஊருல பெரிய மனுஷன். அவர் சொன்னா எப்படி கேட்காம இருப்பாங்க. நான் அவர் கிட்ட போய் நேராவே கேட்டேன். அவரு, அஹல்யா துணை இல்லாம தனியா இருக்காம்மா. பாவம். அந்த வயசு அப்படி தான் இருக்கும். அதை எல்லாம் நீ பெருசா எடுத்துக்காதே. இப்போ வேலை இருக்குறதால அவ மனசு அதுல ஈடுப்பட ஆரம்பிச்சிடும். கவலைப்படாதேன்னு சொல்லிட்டாரு. அதை எப்படி ஒத்துக்க முடியும்?” கோபாவேசமாக கேட்டாள் சவீதா.
டாக்டர் பிரசாத் சவீதாவிடம் சொன்ன சமாதானம் சக்திக்கு நெருடலாக இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் அவரிடமும் பேச வேண்டும் என்று இதையும் நினைவில் குறிப்பெடுத்துக் கொண்டாள்.
மேலும் சிறிது நேரம் சவீதாவிடம் பொதுவாக பேசிக் கொண்டிருந்து விட்டு சக்தியும், சத்யாவும் கிளம்பினார்கள்.
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்