தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 39 - பிந்து வினோத்
39. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பாரதி மெதுவாக அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் புரிந்துக் கொள்ள துவங்கினாள்.
நரேந்திரனும் நிரஞ்சனும் கிட்டத்தட்ட ஒரே குணாதிசயம் கொண்டவர்களாக இருந்தார்கள். இருவருமே அமைதியானவர்கள். ஆனால், குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவர் மீதும் மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். மதுவிற்காக என்று பெற்றவர்கள் சொன்ன உடன் மறுக்காமல் திருமணத்திற்கு சம்மதித்தவன் நிரஞ்சன். அந்த அளவிற்கு தன் குடும்பத்தினர் மீது அன்பு வைத்திருப்பவன்!
அப்பா மகன் இருவருமே தேவைக்கு அதிகமாக பேசி பார்ப்பது மிகவும் அரிது. கடந்த சில மாதங்களில் நரேந்திரனும், நிரஞ்சனும் பாரதியிடம் பேசிய நேரங்களை கை விட்டு எண்ணி விடலாம். ஆனால் எப்போதும் அவளுக்காக அவர்கள் முகத்தில் புன்னகை மட்டும் இருக்கும்.
விவேக் அவனுடைய அம்மாவை கொண்டு பிறந்திருந்தான். பேச்சில் இருக்கும் துடுக்குத்தனம், பிடிவாதம், அன்பு, அக்கறை என எல்லாவற்றிலும் அம்மாவுடைய ஜெராக்ஸ் காப்பியாக இருந்தான். கற்பகமும் விவேக்கும் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும்... அவர்களுக்கு பிடித்தவர்கள் அங்கே இருந்தால்...!!!
மது, அவளுடைய அம்மா அப்பா இருவரின் குணாதிசய கலவையாக இருந்தாள். ஒரு சில நேரம் கலகலப்பாக இருப்பவள், சில சமயம் பேசாமடந்தையாகவும் மாறிப் போவாள். மனதில் எந்த சூது வாதும் இல்லாத குழந்தைப் போல் அவள்...
உமா, பாரதிக்கு இன்னுமொரு பவித்ராவாக இருந்தாள். செல்லப் பெண்ணாக பிறந்து வளர்ந்திருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக ஹாஸ்டலில் சுதந்திரமாக வாழ்ந்ததாலும், பாரதிக்கு அங்கே அந்த கூட்டு குடும்பத்தில் தன்னை ஒருத்தியாக பொறுத்திக் கொள்வது சுலபமாக இல்லை. ஆனால் உமா அவளை தள்ளி தனியாக இருக்க விட்டு விடவில்லை. அந்த வீட்டு மருமகளாக தான் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் பாரதியையும் இணைத்துக் கொண்டாள் உமா...
இப்படி, அந்த வீட்டில் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக இருந்தப் போதும், ஒருவர் மற்றவர் மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருந்தார்கள். அவர்களுக்குள் இருந்த வேறுப்பாட்டை