எல்லாம் மீறி, அவர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து, அந்த குடும்பத்தின் ஆணி வேராக இருந்தது கற்பகம் தான். எல்லா விஷயத்திலும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கற்பகத்திடம் தான் இருந்தது.
விவேக் புது பிஸ்னஸ் தொடங்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தப் போதும், அம்மாவின் ஒப்புதல் கிடைக்காத ஒரே காரணத்தினால் தான் அதுவரை அவனின் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளாமல் இருந்தான். இதற்காக அம்மாவிடம் கோபம் இருந்தப் போதும், அம்மாவின் பேச்சை மீறி எதுவும் செய்யாமல் இருந்தான். இப்போது பாரதியின் மூலம் அவனின் விருப்பம் நிறைவேறப் போவதில் அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி தான்... ஆனாலும், அதையும் கற்பகம் சொன்ன பிறகே ஏற்றுக் கொண்டான்!! அதே போல் பாரதியை விரும்புவதையும் அம்மாவிடம் சொல்லி தான் திருமணத்திற்கு சம்மதம் வாங்கினான். அம்மாவின் வார்த்தைக்கு அப்பா மறு வார்த்தை சொல்ல மாட்டார் என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான்.
பாரதி வளர்ந்திருந்த சூழல் வேறு விதமாக இருந்தது. குடும்பத்தில் ஒரே பெண் என்பதால், மிகுந்த செல்லமாக வளர்ந்தாள். அவள் வீட்டில் அவள் வைத்தது தான் சட்டமாக இருந்தது. சிறு வயது முதலே பெற்றோரால் மகளுக்கு மகளாக, மகனுக்கு மகனாக வளர்க்கப் பட்டவள். பெண் உரிமை என்றில்லாமல், தவறு என தோன்றுவதை தயங்காமல் தட்டிக் கேட்கும் குணம் கொண்டவள். இடையில் பாலாவை நிராகரித்து, அவனால் மனதில் காயப் பட்டிருந்த போதும், எங்கேயும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் கம்பீரமாக இருந்தவள்.
இப்படி ஏற்கனவே பலவிதமான குணங்கள் கொண்ட அங்கத்தினர் இருந்த குடும்பத்தில், சராசரி பெண்ணில் இருந்து பெரிதும் வேறுப்பட்ட பாரதி, மருமகளாகும் போது, சலசலப்புக்கள் எதிர்பார்க்க கூடியவை தான். அதிலும் மற்றவருக்காக எப்போதும் முடிவு எடுத்து பழகிய கற்பகத்திற்கும், தனக்கு தானே எல்லா விதத்திலும் முடிவு எடுத்து பழகி இருந்த பாரதிக்கும் பிரச்சனை இல்லாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.
ஆனால் ஆச்சர்யமே ஆச்சர்ய படும் விதமாக அவர்கள் இருவரிடையே பெரிய பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை. அதற்கு முக்கிய காரணம், விவேக் பாரதியின் மீது வைத்திருந்த அன்பு. முன்பு எப்படி இருந்த போதும், கணவனின் அன்பில் பாரதிக்கு இப்போது ஒரு சதவிகிதமும் சந்தேகம் இல்லை. அப்படிப்பட்ட கணவன் மதிக்கும் மாமியாரிடம் எந்த