(Reading time: 9 - 18 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

விதமான சண்டையும் வளர்க்க அவள் விரும்பவில்லை.

  

சின்ன சின்ன விஷயத்திலும் கற்பகத்தின் ஆதிக்கம் இருக்கும் போது, எரிச்சல் ஏற்பட்டாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருக்க பழகிக் கொண்டாள் அவள்.

  

இதை எல்லாம் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த உமாவிற்கு, இது பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தது. ஆனால், எப்போதுமே மற்றவர் விஷயங்களில் தேவைக்கு அதிகமாக மூக்கை நுழைக்காதவள் என்பதால் இதைப் பற்றி எல்லாம் உமா பாரதியிடம் கேட்கவில்லை.

   

மொத்தத்தில், வீடு கல்லூரி என இரண்டு இடங்களிலும் புது வாழ்க்கை முறையில் செட்டிலாக துவங்கி இருந்தாள் பாரதி.

  

🌼🌸❀✿🌷

   

அன்று கற்பகத்திற்கு அவளின் தொழிற்சாலையை விரிவு படுத்தும் (expansion) முயற்சி தொடர்பான முக்கியமான மீட்டிங் இருந்தது. மதியம் இருந்த ஒரு முக்கிய பிஸ்னஸ் லஞ்ச் முடித்து விட்டு கற்பகமும் விவேக்கும் மதியமே வீடு வந்து விட்டார்கள். இருவரும் தங்களின் செல்ஃபோன் வழியாக மீட்டிங் நடந்த அறைக்கு தொடர்புக் கொண்டு வீட்டில் அவரவர் அறையில் இருந்து இந்த முக்கிய மீட்டிங்கில் கலந்துக் கொண்டார்கள்.

   

கிட்டத்தட்ட எல்லாம் முடிவாகி விட்ட நிலையில், சில முக்கியமானவர்களின் ஒப்புதல் (approval) மட்டும் தேவைப் பட்டது. அனைவரும் ஒப்புக் கொள்வதாக தான் தோன்றியது, ஆனால் விவேக் மட்டும் சில பல கேள்விகளை கேட்டு மீட்டிங்கை இழுத்துக் கொண்டிருந்தான். கற்பகத்திற்கு அதற்கான காரணம் புரியாமல் இல்லை. விவேக் வேண்டுமென்று தான் அப்படி இழுத்தடித்துக் கொண்டிருந்தான், பழி வாங்குகிறானாம்!!!! அதையும் தான் பார்ப்போமே என்று அவனை பேச விட்டு விட்டு, கற்பகம் ஒரு புன்னகையோடு, அமைதியாக இருந்தாள்.

  

நேரம் கிட்டத்தட்ட ஐந்தாகி இருக்கவும், செல்ஃபோனை காதில் வைத்தப் படி டைனிங் ஹால் பக்கம் வந்தாள் கற்பகம். அங்கே உமாவும், பாரதியும் பேசிக் கொண்டு இருப்பதைக் கண்டாள்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.