This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அருணாச்சலமோ, “சுந்தரி உன் பக்கத்துல இருக்காளே, நானும் அம்மாவும் வீட்டுக்கு போயிட்டு வரட்டுமா இனியா?” என இனியவனிடம் கேட்டார்.
அதற்கு இனியவன் பதில் சொல்லும் முன்பு, சுந்தரி, "எதுக்கு மாமா அலைச்சல்? இவரை வேற ரூமுக்கு வேற மாத்த போறதா டாக்டர் சொன்னாரே?” என்றாள்.
“என்னோட மாத்திரை சாப்பிடாம கிளம்பி வந்துட்டேன் சுந்தரி. நேரத்துக்கு அந்த மாத்திரையை போடலைனா எனக்கு கிடுகிடுன்னு படபடப்பா இருக்கும். அப்போ இருந்த நிலைமைக்கு அதை எல்லாம் யோசிக்கலை. இப்போ நானும் ஜெயாவும் வீட்டுக்குப் போய் மாத்திரை எடுத்துட்டு வரோம். இவனுக்கு சாத்துக்குடி, ப்ரெட்ன்னு வாங்க வேண்டியதும் வாங்கிட்டு வரோம்.”
“அந்த மாத்திரை பேரு தெரியுமா மாமா? இங்கே ஹாஸ்பிட்டலேயே மெடிகல் ஷாப் இருக்கே. வாங்கிடலாம். அதைப் போட்டுட்டு அப்புறமா பொறுமையா மத்ததை எல்லாம் வாங்கலாமே?”
“இதை நான் யோசிக்கவே இல்லையே. சுந்தரி என்ன புத்திசாலி பார்த்தீயா ஜெயா?” அருணாச்சலம், ஜெயஸ்ரீ இரண்டுப் பேரும் மருமகளை மெச்சுத்லாக பார்த்தார்கள்.
“போதும், போதும்! நிறுத்துங்க! விட்டா அவளுக்கு சிலை வச்சுருவீங்க போலருக்கே!" என அவர்களை கலாய்த்த இனியவன், மனைவியிடம், "அப்பாவோட மருந்து பேரு என் கிட்ட இருக்கு சுந்தரி. நாம ரெகுலரா வாங்குற கடையில இருந்து எனக்கு ஈமெயில் ரெசிப்ட் அனுப்புவாங்க. என் போன்ல டீடெய்ல்ஸ் இருக்கும்,” என்றான்.
“உன் ஃபோன் என் கிட்ட இருக்கு இனியா. ஹாஸ்பிட்டல்ல கொடுத்தாங்க.” அருணாச்சலம் இனியவனின் போனை எடுத்து அவனிடம் நீட்டினார்.
“அவன் இப்போ ஃபோனை கையில வாங்கி பார்க்க முடியுமா? நீங்களே பாருங்க,” என்றாள் ஜெயஸ்ரீ.
அருணாச்சலமும் இனியவனின் ஃபோனில் இருந்து வேண்டிய விபரத்தை எடுத்து நோட் செய்துக் கொண்டார். பின்,
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.