அக்கம் பக்கத்துல எல்லோரும் ஒரு மாதிரியா பேச ஆரம்பிச்சாங்க. வேற வழி இல்லாம வீட்டை வித்துட்டு வேற வாடகை வீட்டுக்கு போனோம். வீட்டை விட்டு வெளியே போக கூட எனக்கு பிடிக்கலை. எப்போவும் சிரிப்பும் பேச்சுமா இருக்கும் அக்காவும், அம்மாவும் எப்படியோ இருந்தாங்க. அக்காவோட ஃபியான்சே புரிஞ்சு நடந்துக்கிட்டார். கல்யாணம் வேண்டாம்னு சொன்ன அக்கா மனசை மாத்தி கல்யாணத்தை தள்ளி வைக்கலாம்னு சொனனார்.
எல்லாத்துக்கும் நான் தான் காரணம்னு எனக்கு தோணிச்சு. ஒவ்வொரு தடவையும் அம்மாவும், அக்காவும் வேண்டாம்னு சொன்னப்போ கேட்காம எனக்கு சரின்னு தோணினதை செய்தேன். அதனால தான் அவங்க கஷ்டப் படுறாங்கன்னு தோணிச்சு. ஒரு நாள் அம்மாவோட தூக்க மாத்திரை எல்லாத்தையும் எடுத்து விழுங்கினேன். ஆனாலும் காப்பாத்திட்டாங்க. அங்கே ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போது கௌரவோட அம்மா அபிராமி என்னை வந்து சந்திச்சாங்க. அவங்க மகன் மேல தப்புன்னு தெரியும், ஆனால் அவங்களால் ஒன்னும் செய்ய முடியலைன்னு சொன்னாங்க. வருத்தப் பட்டாங்க. தற்கொலை செய்துக்குறது கோழைத்தனம்னு சொன்னாங்க. நான் உயிரோட இருக்க வரைக்கும் என் அம்மாவும், அக்காவும் சந்தோஷமா இருக்க முடியாதுன்னு சொன்னேன். அவங்க தான் மதியூர் பத்தி என் கிட்ட சொன்னாங்க. அவங்க பூர்வீகம் மதியூர். ஆனால் நிறைய தலைமுறையாவே மும்பைல செட்டில் ஆகிட்டாங்க. அவங்க பேருல இருக்க வீட்டை என்னை பயன்படுத்திக்க சொன்னாங்க. எனக்குப் பிடிக்கலை ஆனாலும் மும்பைல இருந்து வந்தா போதுங்குற மனநிலைல இருந்தேன். அதே ஹாஸ்பிட்டல்ல என் பக்கத்து பெட்ல அருணோட அம்மா அட்மிட் ஆகி இருந்தவங்க இறந்துட்டாங்க. அவங்க ஒரு செக்ஸ் வொர்க்கர், அதனால அருணுக்கு அப்பா யாருன்னே தெரியாதாம். மும்பைல இருந்து கிளம்புறப்போ அருணையும் என்னோட அழைச்சுட்டு கிளம்பினேன். அம்மாக்கும், அக்காக்கும் எங்கே போறேன்னு சொல்லாம ஒரு லெட்டர் மட்டும் எழுதி வச்சுட்டு கிளம்பி வந்தேன். இங்கே வந்து ஒரு வேலை தேடிட்டு அந்த வீட்டை விட்டுட்டு போயிடனும்னு முடிவு செய்தேன்.”
அபினவ் அவளுடைய விரல்களை இறுக பற்றிக் கொண்டிருந்தானே தவிர வேறு ஒன்று கேட்கவில்லை.
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்