வருடம் 1982
மெட்ராஸ்
ஜானகியை அணைத்துக் கொண்டிருந்தவன் மெல்ல சூழ்நிலையை உணர்ந்து அவளை விட்டு பட்டென விலகி நின்றான், குற்ற உணர்வில் கூனிக்குருகி நின்றான். அவளோ அவனை இயல்பாகவே பார்த்தாள். அவனோ ஒரு நொடி அவளை தலைதூக்கிப் பார்த்துவிட்டு உடனே தலை கவிழ்ந்தவன்
”என்னை மன்னிச்சிடு சாரி” என்றான் அவளோ
”சரி மன்னிச்சிட்டேன்” என்றாள் வெகு இயல்பாக
”உனக்கு என் மேல கோபம் இல்லையே”
”இல்லை”
”ஏன்“
”அதான் நீங்க சாரி கேட்டீங்கள்ல, அதனால கோபம் இல்லை”
”நீ காணலைன்னதும் நான் துடிச்சிப் போயிட்டேன், பயத்தில உன்னை அங்க இங்கன்னு தேடி அலைஞ்சேன், கடைசியில உன்னைப் பார்த்ததும் என்னையும் அறியாம உன்னை அப்படி அப்படி”
”அதான் சாரி சொல்லிட்டீங்கள்ல, மறுபடியும் எதுக்கு அந்தப் பேச்சு, இப்ப எதுக்காக என்னை தேடினீங்க, நான் என்ன சின்ன பொண்ணா தொலைஞ்சிப் போறதுக்கு”
”அப்படியில்லை, நான் பாட்டுக்கு டாக்டரை கூட்டிட்டு வந்து உனக்கு வைத்தியம் பார்க்க வைச்சேன், அதுல நீ மனசு உடைஞ்சிப் போய் இங்கிருந்து போயிட்டியோன்னு நினைச்சி
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.