தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 42 - பிந்து வினோத்
42. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பாரதியின் மனதில் இருந்ததை விவேக்கால் ஊகிக்க முடிந்தாலும், அவளே சொல்லட்டும் என்று,
“என்ன விஷயம் ரதி? என் கிட்ட சொல்ல உனக்கு என்ன இவ்வளவு தயக்கம்?” என்றான்.
“இல்லை விவேக், தப்பா எடுத்துக்காதீங்க... ம்ம்ம்... நான் காலேஜ்ன்னு சொல்லவே... அந்த பாலா விஷயம்னு கெஸ் செய்து நீங்க அதைப் பத்தி கேட்க மாட்டீங்கன்னு நினைச்சேன்...” என்றாள் பாரதி தயக்கம் நிறைந்த குரலில்!
“கம் ஆன் ரதி! இதை சொல்லவா இவ்வளவு தயக்கம்? எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும். இது போல விஷயத்தை எல்லாம் என் கிட்ட பேச நீ எப்போவுமே தயங்க வேண்டாம். நான் ஒன்னும் சராசரி கணவன் இல்லை. உன் மேல் ரொம்ப அன்பு வச்சிருக்கேன்... உன்னை என்னால் புரிஞ்சுக்க முடியும்... எனக்கு என்னவோ அந்த பாலா மேல் உனக்கு இருந்தது காதலே இல்லைன்னு தோணுது...”
விவேக்கின் கனிவான வாரத்தைகளை கேட்டு மனம் குளிர்ந்திருந்த பாரதி, அவன் சொன்ன கடைசி வாக்கியத்தை கேட்டு மறுப்பாக தலை அசைத்தாள்...
“ப்ச்... கதையில, சினிமால வரதுப் போல பழைய காதல் வெறும் ஈர்ப்பு, இன்ஃபேச்சுவேஷன்னு சொல்ல எனக்கும் ஆசை தான்... ஆனால்...”
“ரதி, பாலா பணத்துக்காக மனம் மாறினான்னு உனக்கு கோபம்ன்னா, எனக்கு மட்டும் எப்படி பணம் கொடுக்க சம்மதிச்ச? இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கு? அவன் வாய் விட்டு கேட்டான், நான் கேட்கலை, அவ்வளவு தானே?”
“ச்சே... அவனோட உங்களை கம்பேர் செய்யாதீங்க விவேக். நீங்க ஒரு பொண்ணை கல்யாணம் செய்துக்குறேன்னு சொல்லிட்டு பணத்துக்காக வேற ஒருத்தியை கல்யாணம் செய்துக்க நினைச்சீங்களா என்ன? பணம் கிடைக்கும்ன்னு தெரிஞ்ச உடன் மனம் மாற எல்லோரும் அவனை போல் பச்சோந்தி இல்லை... அந்த பேச்சு இப்போ எதுக்கு? அவனைப் பத்தி நாம எப்போவுமே பேச வேண்டாம் விவேக். எனக்கு எல்லாமே நீங்க தான்... என் மனம் முழுக்க