கொண்டிருந்தார்.
“என்ன இது உஷா சிஸ்டர்? சரி இந்தாங்க, இதை ஜென்சி சிஸ்டர் கிட்ட கொடுங்க...”
நர்ஸ் அங்கிருந்து செல்லவும்,
“ரொம்ப வருஷமா இங்கே வேலை செய்றாங்க... அவங்களுக்குன்னு யாரும் இல்லை... வீட்டில இருந்து ரெஸ்ட் எடுங்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்குறாங்க... உங்களுக்கு எடுக்க சொன்ன ஸ்கேன் விபரத்தை தப்பா நோட் செய்து வச்சிருக்காங்க... என்ன செய்றது? அவங்களை போகவும் சொல்ல முடியலை, கோபமாவும் பேச முடியலை, வயசுக்கு மரியாதை தரணுமே...” என்று புலம்பி தள்ளினார் டாக்டர் தாமஸ்.
அவரின் புலம்பலுக்கு பதில் எதுவும் சொல்லாமல் பெயருக்கு புன்னகைத்து விட்டு, அவர் சொன்னது போல் ஸ்கேன் எடுக்க விவேக்கும், பாரதியும் எழுந்துக் கொண்டார்கள்!
பாரதி ரகசியக் குரலில் சொன்ன செய்திக்குப் பிறகு, விவேக் எதற்குமே கேள்வி கேட்கவில்லை. எல்லா டெஸ்ட்க்கும் ஒத்துழைத்தான். ஒரு வாரத்தில் ரிசல்ட்டை வந்து வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிந்துக் கொண்டு, கன்சல்டேஷன் மற்றும் டெஸ்ட்டுக்கான பணத்தை கட்டி விட்டு இருவரும் கிளம்பினார்கள்.
கார் நோக்கி நடக்கும் போது நினைவு வந்தவளாக,
“ஏங்க, விஸ்வநாதன் அங்கிள் உங்களை டைம் கிடைக்கும் போது பேச சொன்னார். உங்க புது பிஸ்னஸ் எந்த ஸ்டேஜில் இருக்குன்னு சும்மா கேட்க தான்னு நினைக்கிறேன்...” என்றாள் பாரதி.
“ம்ம்ம், நான் பேசுறேன்! ஆமாம், நீ என் கிட்ட பிஸ்னஸ் பத்தி எதுவும் கேட்கவே இல்லையே ரதி?”
“முதல்ல அத்தை வேலை முடியட்டுமேன்னு நினைச்சேன்...”