This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அரசியும், சந்திரிகாவும் மும்முரமாக விவாதத்தில் ஈடுப் பட்டிருக்கும் நேரத்தில், தமிழ்ச்செல்வி பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள்.
வேறென்ன, யசோதா அவளுடைய காதல் கதையை சொல்லி கலாய்த்துக் கொண்டிருந்தாள்.
“எப்போவும் sad cat மாதிரி பார்ப்பீயே அது போல முழிக்க போறேன்னு பார்த்தா, நீ என்ன அடிச்சு தாக்குற? என்ன கற்பனை சக்தி. வெற்றியே அசந்து போய் பார்த்தான்னு சொல்ற!”
“யார் அசந்து போய் பார்த்தான்னு எனக்கு தெரியாது. உங்க தம்பி அங்கே நின்னாருனு சொன்னேன்.”
“அவன் என் தம்பி இல்ல சாய்க்கு தம்பி.”
“அது இப்போ முக்கியமா?”
தலையை சிலுப்பிக் கொண்டாள் தமிழ்ச்செல்வி.
“வெற்றி மாதிரியே செய்றேன்னு சொன்னா இன்னும் கோப படுவ. நான் எதுவும் சொல்லலை. நீ இங்கேயே இரு. நான் மீதி இருக்க இரண்டு வாண்டுங்களை இழுத்துட்டு வரேன்.”
யசோதா போன பிறகு மீண்டும் ஒரு தடவை தலை சிலுப்பிப் பார்த்தாள் தமிழ்ச்செல்வி.
இந்த வீட்டிற்கு வந்த ஒரு வாரத்தில் கற்றுக் கொண்டிருந்த புது பழக்கம். வெற்றியிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறாள்.
இதென்ன புதிதாக காப்பி அடிக்குற பழக்கம்? அதுவும் அந்த திமிர் பிடித்த வெற்றியிடம் இருந்து!
“காலேஜ் எப்படி போகுது? முதல் நாள் காலேஜுக்கு போயிட்டு வந்து படிச்சுட்டு இருப்பன்னு பார்த்தா நீ உட்கார்ந்து கதை சொல்லிட்டு இருக்க! காலேஜில நடத்தினதை கவனிச்சீயா
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.