தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
27. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சஞ்சீவின் பதிலுக்காக காத்திருக்காமல், இந்துவே தன் பேச்சை தொடர்ந்தாள்.
"சஞ்சீவ்.... நான் எதுக்கு இதைப் பத்தி இப்போ பேசுறேன்னு நீங்க யோசிக்கலாம்... வந்து... யோசிச்சுப் பாருங்க... கீதா அக்கா கிட்ட போட்ட அதே ரெண்டு கண்டிஷனை காஞ்சனா ஆன்ட்டி என் கிட்ட சொன்னால்... நான் என்ன செய்ய முடியும்????"
"இரண்டாவது கண்டிஷனை அம்மா உன் கிட்ட சொல்ல மாட்டாங்க இந்து... அண்ணி விஷயத்துல... ஹ்ம்ம்... உன்னைப் பிடிக்காதவங்க எப்படி நல்லவங்களா இருக்க முடியும்... அம்மாக்கும் அண்ணியோட அம்மா பத்தி எதாவது தெரியுமா இருக்கும்... அதனால அவங்க கிட்ட பேசக் கூடாதுன்னு கண்டிஷன் போட்டிருக்கலாம்.... ஆனால், அர்ச்சனா ஆன்ட்டி விஷயம் வேற தானே..."
சஞ்சீவ் சொன்ன விதத்தில் இந்து முகத்தில் இயல்பாய் புன்சிரிப்பு மலர்ந்தது...
"ஆனாலும் சஞ்சீவ், இப்படி கண்டிஷன் போட்டு அம்மா கிட்ட பேசாதேன்னு சொல்றது தப்... சரி இல்லை தானே?"
"நீ சொல்றது சரி தான்... ஃபர்ஸ்ட் கண்டிஷன் அம்மா சொன்னாலும் நானே ஒத்துக்க மாட்டேன்... என்னோட மானசீக குருவை அப்படி ஈசியா விட்டு கொடுத்துருவேனா என்ன?"
"எனக்கு அது தெரியும் சஞ்சீவ்... நீங்க ஆரம்பத்தில நான் தான் முக்கியம்னு சொன்ன போதே எனக்குத் தெரியும்... ஆனால், எனக்கு இப்படி யார் கூடவும் சண்டைப் போட்டு புது வாழ்க்கையை தொடங்க ஆசை இல்லை... எனக்கு உறவுகளும் வேண்டும்... என்னோட சுய மரியாதையும் வேண்டும்... கீதா அக்கா கிட்ட எதுக்கு இந்த கண்டிஷன்ஸ்க்கு எல்லாம் சம்மதிச்சீங்கன்னு நான் கேட்டப்போ, அவங்க என்ன சொன்னங்க தெரியுமா?
இந்து, எனக்கு இப்போ ராஜீவை தவிர வேற எதுவும் முக்கியமா தோணலை... அதனால மத்ததை எல்லாம் விட்டுக் கொடுக்குறது பெரிசா தெரியலைன்னு சொன்னாங்க...
அந்த தெளிவு தான் சஞ்சீவ், உங்க வீட்டில இப்போ இருக்கிற அமைதிக்கு காரணம்... அந்த அமைதி என்னால குலையக் கூடாது என்பது தான் என்னோட விருப்பம்... எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.... ஆனால் தெளிவா முடிவு எடுக்க எனக்கு கொஞ்சம் டைம் வேணும்...