(Reading time: 7 - 13 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"ஹுஹும்ம்ம் .... நீ போய் முதல்ல கையை கழுவிட்டு டிரஸ் மாத்திட்டு வா... வெளியே போயிட்டு வந்து அப்படியே சாப்பிட கூடாதுன்னு சொல்லி இருக்கேன் தானே..."

  

"போங்கம்மா...." என்று செல்லமாக சினுங்கிய போதும், அம்மாவின் சொல் படி எழுந்து சென்று உடை மாற்றி, முகம் கழுவி வந்தாள் இந்து.

  

அவள் டைனிங் ஹாலை அடைந்தப் போது, அர்ச்சனாவும் கனகாவும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன என்பது போல் இருவரையும் மாறி மாறி பார்த்தாள் இந்து,

  

"வேற ஒன்னும் இல்லைடா... உனக்கு திருஷ்டி சுத்தி போட சொல்றா கனகா..." என்றார் அர்ச்சனா.

  

"ஆமாம் சின்ன அம்மா... நீங்க இன்னைக்கு முகத்தில இப்படி சிரிப்போட இருக்கிறதை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு... என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க..." என்று கனகாவும் சொன்னாள்.

  

முகத்தில் இருந்த புன்னகை பெரிதாக,

   

"ம்ம்ம்ம்... என்ன ஒரே ஐஸ் மழையா இருக்கு.... அப்போ இவ்வளவு நாள் நான் அழகா இல்லையா??" என்றாள் இந்து!

  

"அப்படி இல்லை சின்னம்மா... இவ்வளவு நாளும் நீங்க அழகா தான் இருந்தீங்க... ஆனாலும் முகத்தில ஒரு சின்ன சோக ரேகை இருந்துட்டே இருக்கும்.... எப்போதும் ஏதோ யோசனையிலேயே இருப்பீங்க... ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு தான் பழைய மாதிரி இருக்கீங்க.... ஐயோ என் கண்ணே பட்டிருக்கும்... சாப்பிட்ட உடனே நானே திருஷ்டி சுத்தி போடுறேன்..."

  

கங்காவிற்கு பதில் ஏதும் சொல்லாது, சின்ன புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு, அமைதியாக உணவருந்த தொடங்கினாள் இந்து. அர்ச்சனாவும் அமைதியாகவே உணவருந்தினார். இருவரும் சாப்பிட்டு முடித்ததும்,

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.