(Reading time: 7 - 13 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"லீவா? அப்போ, நீங்க இரண்டுப் பேரும் மட்டும் தனியாவா இருக்க போறீங்க?" என அக்கறையுடன் வினவினான் சஞ்சீவ்.

  

"இந்த இடத்தில அவ்வளவு பயம் இல்லை... அப்புறம் செக்யூரிட்டி டிவைஸும் இருக்கு... அதனால பயம் இல்லை..."

  

"ஹுஹும்ம்ம்ம் இது சரி இல்லை... என்னோட ஹாஸ்பிட்டலுக்கு செக்யூரிட்டி அனுப்புற கம்பெனி கிட்ட பேசி உங்க வீட்டுக்கு ரெண்டு ஆளை அனுப்ப சொல்றேன்... உங்க வாட்ச்மேன் லீவ் முடிஞ்சு வந்த பிறகு அவரை மத்த வேலைக்கு யூஸ் பண்ணிக்கோங்க..."

  

சஞ்சீவின் அக்கறை மனதை தொட,

  

"தேங்க்ஸ்" என்று சொல்லி பச்சரசி பல் தெரிய புன்னகைத்தாள் இந்து.

  

சஞ்சீவின் பார்வை மாறவும், அவள் கன்னங்கள் தானாக சிவந்தது...

  

"சரி சஞ்சீவ், நான் வரேன்..." என்று சொல்லி விட்டு, கார் கதவை திறந்தவளை, சஞ்சீவின் குரல் நிறுத்தியது.

  

"இந்து..."

  

இந்து திரும்பிப் பார்க்க, அவளின் வலது கரத்தை பற்றிய சஞ்சீவ்,

  

"நீ தெளிவா முடிவு எடுக்குறது நல்லது தான்... ஆனால் நானும் உனக்கு ஹெல்ப் பண்ணும் தானே..." என்றவன்... அவள் புரியாது பார்க்கும் போதே, குனிந்து அவள் கரத்தில் மென்மையாக முத்தமிட்டான்.

  

ஒரு வினாடி பிரமித்த இந்து, மறு வினாடி,

  

"வரேன்..." என்று தெளிவின்றி முணுமுணுத்து விட்டு, காரில் இருந்து இறங்கி உள்ளே

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.