This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விஜயசாந்தியின் பதில் விஷ்ணுப்ரியாவிற்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.
“நானா? எனக்கே அவங்க இரண்டுப் பேரை பத்தியும் பெருசா எதுவும் தெரியாதேக்கா...” என்றாள் தயக்கத்துடன்.
“தெரியாததை விடு... தெரிஞ்சதை வச்சு மட்டும் சொல்லு... இப்போ, சுவா முருகர் பாட்டா கேக்குறதை வச்சு நான் எப்படி உங்க அண்ணாக்கும் அவளுக்கும் நடுல இருக்க லிங்க் பத்தி யோசிச்சேன் பார்த்தீயா... அந்த மாதிரி உங்க அண்ணா கிட்ட ஏதாவது... நீ கவனிச்ச ஏதாவது இருந்தா சொல்லேன்...” என்றாள் விஜயசாந்தி.
விஷ்ணுப்ப்ரியா யோசிக்க முயன்றாள்... ஆனால் ஒன்றும் பிடிப்படவில்லை....
ஆனால் விஜயசாந்தியும் அவளை விடுவதாக இல்லை...
“யோசி வி.பி... சின்னதா ஏதாவது கட்டாயம் இருக்கும்... வழக்கமா இருக்குறதா இல்லாமல் oddஆ ஏதாவது உன் அண்ணா கிட்ட இருக்கா, இல்லை அவர் அப்படி ஏதாவது நடந்துக்கிட்டாரான்னு யோசி...”
“ஹ்ம்ம்ம்... அந்த மாதிரி எதுவும் ஞாபகம் வர மாட்டேங்குதேக்கா....”
“யோசிச்சுட்டே இரு விபி... ஏதாவது ஸ்ட்ரைக் ஆகும்...”
சரி என்று ஒப்புக் கொண்ட விஷ்ணுப்ரியா, விஜயசாந்தி சொன்னதை அப்படியே செய்யவும் செய்தாள்...!
ஆனால் அவள் எத்தனை விதமாக மண்டையை தட்டி யோசித்தாலும் விஷாகன் oddஆக நடந்ததாகவோ, சொன்னதாகவோ அவளுக்கு தோன்றவே இல்லை....
ஆனாலும் முன்பு செய்த குளறுபடிக்கு, இப்போது ஏதாவது விதத்தில் உதவி விடுவது என்ற முடிவுடன் மீண்டும், மீண்டும் யோசிக்க முயன்றாள்.
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.