This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“பதினாறாம் நாள் குழந்தைக்கு பேர் வைக்கனும். பேர் செலக்ட் செய்துட்டீங்களா?” என லக்ஷ்மி ராதிகா, மகேஸ்வரி மற்றும் கௌஷிக்கை பொதுவாகப் பார்த்துக் கேட்டாள்.
“பேர் செலக்ட் செய்தாச்சு அம்மா. ஆனால், பேர் வைக்குறதை ஊருக்கு போய் அன்னைக்கு ஒரு கோவில் போனோமே அங்கே போய் செய்யலாமா?” என்றுக் கேட்டாள் ராதிகா.
“ஊருக்கா??? இந்த நிலமையில நீ அவ்வளவு தூரம் ட்ராவல் செய்யலாமான்னு தெரியலையே ராது?”
“டாக்டர் செய்யலாம்னு சொன்னாங்க! ப்ளீஸ்ம்மா...”
ராதிகா கெஞ்சவும்,
“ராது, உன் ஆசைப் படி தான் எல்லாம் நடக்கும்! நான் ஃப்ளைட்ல டிக்கட் புக் செய்றேன். கோவில்ல போயே பேரு வச்சிடுவோம்,” என உடனடியாக மனைவியின் ஆசைக்கு பச்சைக் கொடி காட்டினான் கௌஷிக்.
லக்ஷ்மி மகேஸ்வரியைப் பார்த்தாள்.
“அவங்க விருப்பம் போல செய்யட்டும். குழந்தைக்கு கோவில்ல பேர் வச்சாலும் விஷேஷம் தானே...” என தன் ஒப்புதலை தெரிவித்தாள் அவள்.
"சரி, அப்போ நான் பிரேமா கிட்ட சொல்லி ஏற்பாடு செய்ய சொல்றேன்!" என்று லக்ஷ்மியும் தன் சம்மதத்தை சொன்னாள்!
🌼🌸❀✿🌷
ஃப்ளைட்டில் தன்னருகே இருந்த மனைவியைப் பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ஷிவா, அருந்ததியின் பார்வையை கவனித்து விட்டு,
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.