அஹல்யாவை விலக்காமல் அருணை கையில் தூக்கிக் கொண்டான் அபினவ்.
“இனிமேல் நாம மூணு பேரும் ஒரே குடும்பம்.” அபினவ் சொல்லி முடித்தப் போது அழைப்பு மணி சத்தம் கேட்டது.
“அஹல்யா, நான் இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன்,” என்று வாசலில் இருந்து குரல் கேட்டது.
🌼🌸❀✿🌷
கையில் இருந்த லிண்டா கேஸ்ட்டிலோ நாவலை கீழே வைத்தாள் சக்தி. மனம் கதையில் பதியாமல் வெறுப்பேற்றியது. விருப்பமே இல்லாமல் விளக்கை அணைத்து விட்டு இருட்டை வெறித்தாள்.
முதல் முதலாக வாழ்க்கையின் மீது அலுப்பு ஏற்பட்டது. இப்படியே தனியாக எத்தனை நாட்கள் கழிப்பது என்ற கேள்வி எழுந்தது. சத்யா சொல்வதுப் போல கல்யாணத்தை பற்றி சீரியஸாக யோசிக்க ஆரம்பிக்க வேண்டுமோ?
மாலையில் கோபமாக வந்து நின்ற தென்றல்வாணனின் நினைவில் அவளுக்கு சிரிப்பு வந்தது. சத்யா அவனுடைய கோபத்தை கூலாக கையாண்ட விதம் மெச்ச வேண்டிய ஒன்று தான்.
இன்ஸ்பெக்டரின் கோபமும் சத்யா மீதான அன்பின் வெளிபாடு தானே. இரண்டுப் பேரும் கதைகளில் வரும் ‘நான் பேச நினைபதெல்லாம் நீ பேச வேண்டும்’ ரக கணவன் மனைவியாக இல்லாமல் போனாலும் நிஜ வாழ்க்கை ‘மேட் ஃபார் ஈச் அதர்’ தம்பதிகளாக தான் இருக்கிறார்கள்!!! பார்க்க சுவாரசியமாக தான் இருக்கிறது!
ஆனால், அவளுடைய கேரக்டருக்கு அப்படி ஒரு மிஸ்டர் ரைட் கிடைப்பது சாத்தியமா? இல்லவே இல்லை, சான்ஸே இல்லை!
டப்!