This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“தமிழ்ச்செல்வி படிச்சு முடிக்கட்டும். அதுக்கு அப்புறம் கல்யாணம் பத்தி பேசலாம் ம்மா,” என்றான் வெற்றி சந்திரிகாவை நேராக பார்த்து!
“அது சரியா இருக்காது வெற்றி. அவ நம்ம வீட்டுல இன்னும் இரண்டு வருஷம் சும்மா தங்கி இருக்கிறது மத்தவங்க கண்ணுக்கு சரியா இருக்காது. தமிழ்ச்செல்விக்கு அப்படி கெட்டப் பேரு வர நாம விடவும் கூடாது,” என்றாள் சந்திரிகா.
இந்த பேச்சின் முடிவு என்னவாக இருக்கு என தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் தமிழ்செல்விக்கும் இருந்தது.
திருமணம் நடந்தாலும் நடக்கவில்லை என்றாலும் அவளுக்கு ஒரு வித்தியாசமும் இல்லை.
படித்து, ஒரு வேலைக்கு போக வேண்டும் என்பது தான் அவளுடைய தற்போதைய குறிக்கோள்.
ஷ்யாம் சுந்தருக்கு பிறகு எந்த ஆணையும் நம்ப அவள் தயாராக இல்லை!
“என்னைக் கேட்டா சிம்பிளா கல்யாணம் நடத்தி முடிச்சிடுறது எல்லோருக்கும் நல்லது. தமிழ்ச்செல்வி குடும்பத்துல இருந்தும் யாரும் அதுக்கு மேல கேள்வி கேட்க முடியாது,“ என்று அரசியும் சந்திரிகா சொன்னதையே ஆமோதித்துப் பேசினாள்.
“சரி! அப்போ நீங்களே ஒரு நல்ல நாளு பார்த்து சொல்லுங்க!” இன்னைக்கு வெயில் அடிக்கிறது என்று சொல்வது போல சாதாரணமாக சொன்னான் வெற்றி.
சந்திரிகாவின் பார்வை தமிழ்ச்செல்வி பக்கம் திரும்பியது. தமிழ்ச்செல்வியின் மனதை ஊடுருவுவதுப் போல அவளைப் பார்த்தாள் சந்திரிகா. தமிழ்ச்செல்வியும் வெற்றி போலவே எனக்கென்ன வந்தது எனும் மனநிலையில் இருந்ததால் கண்டுக்கொள்ளாமல் அந்த பார்வையை சந்தித்தாள்.
சில வினாடிகளுக்கு பிறகு மீண்டும் மகனைப் பார்த்த சந்திரிகா,
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.