This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
இந்து பக்கத்தில் இருந்த வீடியோ பாதுகாப்பு கருவியில் பார்த்தாள். இரண்டுப் பேர் வாசல் கதவு பக்கத்தில் நிற்பது தெரிந்தது. அதே நேரம் அவர்கள் வீட்டு தொலைப் பேசியும் சினுங்கியது. அதை எடுத்து பேசிய அர்ச்சனா, முகத்தில் கேள்வியும் குழப்பமுமாய் நின்ற மகளைப் பார்த்து,
"சஞ்சீவ் செக்யூரிட்டிக்கு ஆள் அனுப்புறேன்னு உன் கிட்ட சொல்லி இருந்தானாமே... அவங்க தான் அங்கே வெளியே நிக்குறாங்க...." என்றாள்.
"ஓ!" இவ்வளவு விரைவாக சஞ்சீவ் செயல் படுவான் என்று இந்து எதிர்பார்த்திருக்கவில்லை... ஆனாலும் சஞ்சீவின் அக்கறை அவளின் மனதிற்கு இதமாக தான் இருந்தது!
இந்து அந்த யோசனையுடன் அதே இடத்தில் நிற்கவும், அர்ச்சனாவே கதவை திறந்து அங்கிருந்தவர்களிடம் பேசினார். பின் கதவை தாளிட்டு விட்டு வந்தார்.
"அவங்க ரெண்டுப் பேரும் இன்னைக்கு செக்யூரிட்டிக்கு இருக்க போறாங்களாம்... நாளைக்கு மத்த விஷயம் எல்லாம் பேசலாம்ன்னு சொல்லி இருக்கேன்... பரவாயில்லையே சஞ்சீவ் ரொம்ப ஹெல்ப் பண்றானே... சரி வாடா செல்லம்... நீ ஏதோ பேசனும்னு சொன்னீயே..."
அர்ச்சனா சொன்னாரோ இல்லையோ, இந்து ஒரு துள்ளலுடன் கிளம்ப தயாரானாள்!
அர்ச்சனா கனகாவை சாப்பிட்டு தூங்க சொல்லி விட்டு, மகளுடன் மாடிக்கு சென்றார்.
அங்கே இருந்த அர்ச்சனாவின் அறைக்குள் சென்றதும், இந்து முதலில் அம்மாவின் செல் ஃபோனை எடுத்து ஸ்விட்ச் ஆஃப் செய்தாள். பின் அந்த அறையில் இருந்த தொலைப்பேசி ரிசீவரையும் எடுத்து வெளியே வைத்தாள்.
"என்ன செய்ற இந்து... எதாவது முக்கியமா..." என்று அர்ச்சனா சொல்ல தொடங்கவும், அவரை பேசி முடிக்க விடாமல்,
"எதுவா இருந்தாலும் கொஞ்ச நேரம் காத்திருக்கட்டும் அம்மா.... மிஞ்சி மிஞ்சி போனால் வேற
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.