எனக்கு தூக்கம் வரலை.... நீயும் தூங்கி இருக்க மாட்டன்னு தெரியும்... கொஞ்சம் நேரம் பேசலாமா? நீ ஒரே ஒரு தடவை ஃபோன் செய்தால்.. அதுக்கு அப்புறம் பிரச்சனை இல்லை... நானே அந்த வேலையும் பார்த்துப்பேன்...
மெசேஜை படித்து விட்டு, சில வினாடிகள் யோசித்த இந்து, பின்,
தூங்கிட்டு இருந்தவளை எழுப்பி பேசலாமான்னு கேட்டா எப்படி... நீங்களும் தூங்குங்க...
என்று அவனுக்கு பதில் மெசேஜ் அனுப்பினாள்.
உடனேயே சஞ்சீவிடம் இருந்து பதில் வந்தது.
எ மி பி அ ராட்சசி! நீ தூங்கலைன்னு எனக்கு தெரியும்... உன்னை அப்புறமா கவனிச்சுக்குறேன்.... குட் நைட்....
பதிலுக்கு அவனுக்கு குட் நைட் அனுப்பி விட்டு ஃபோனை கீழே வைத்தவள்... அவன் அப்புறமாக அப்படி எப்படி கவனிப்பான் என்ற கற்பனையில் ஆழ்ந்தப் படி தூங்கிப் போனாள்.
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...