"அது இந்துமா... என் ஃப்ரெண்ட்..."
"அம்மா!!! என்கிட்டே பொய் சொல்லாதீங்க..."
ஒன்றிரண்டு வினாடிகள் தயங்கிய அர்ச்சனா, பின் மனதை மாற்றிக் கொண்டவராக,
"சரி டா... நான் உண்மையே சொல்லிடுறேன்... உனக்காக தான் காஞ்சனா கிட்ட பேசினேன்..."
"என்னம்மா திடீர்னு இதெல்லாம்?"
"உனக்கு சஞ்சீவ் நல்ல பொறுத்தமா இருக்கும்னு தோணிச்சுடா..."
"அது எப்படி உங்களுக்கு திடீர்னு தோணிச்சு...??"
"இல்லைடா... நீ கோப படாதே... நந்தினி தான் சொன்னா..."
சொன்னது நந்தினியா? இந்துவால் நம்பவே முடியவில்லை!!! நந்தினியை அன்று ஷாப்பிங் சென்டர் பார்க்கிங்கில் பார்த்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது...
இந்த யோசனைகள் ஒருப் பக்கம் ஓட, அம்மாவிடம்,
"அவ சொன்னா??? நீங்க உடனே ஃபோன் பண்ணனுமா? என்கிட்டே பேச வேண்டாமா?" என்றாள் இந்து!
அவளின் தலையை செல்லமாக வருடிய அர்ச்சனா,
"உன்கிட்ட பேசனும்னு தான் நினைச்சேன்... ஆனால் அன்னைக்கு போர்ட் மீட்டிங் வந்தப்போ கமலாவும் சொன்னாங்க... சஞ்சீவ் ரொம்ப நல்ல பையன் மாதிரி தெரியுறான்னு... அதான் உடனே பேசினேன்..."