(Reading time: 7 - 13 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

யார் இந்த டைம்ல உங்களுக்கு ஃபோன் செய்வா? அத்தையோ இல்ல உங்களோட புதிய அந்த ஸ்பெஷல் வளர்ப்பு மகளோ தானே..." என்றாள் இந்து!

  

"ம்ம்ம்... இது என்ன பொறாமையா...??? நந்தினி பாவம் இந்து... அவளைப் பத்தி உனக்கு முழுசா தெரியாது..."

  

முகத்தை சுழித்து,

   

"எனக்கு தெரியவே வேண்டாம்..." என்றாள் இந்து!

  

மகளின் கோபத்தை பார்த்து அர்ச்சனாவிற்கு சிரிப்பு வந்தது. இன்னும் அவள் குழந்தை தான் என மனதில் நினைத்து சிரித்துக் கொண்டார்.

  

"சரி போகட்டும்... இப்போ சொல்லு அப்படி என்ன விஷயம் பேசப் போற???"

  

"நான் அதை பேசுறது இருக்கட்டும்... நீங்க எனக்கு முதல்ல ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க... காஞ்சனா ஆன்ட்டி கிட்ட ஃபோன் செஞ்சு பேசினீங்களா?"

  

மகளின் கேள்வியில் கொஞ்சம் திகைத்தப் போதும், உடனே சமாளித்து கொண்டு,

  

"அதுக்குள்ளே உன் வரைக்கும் விஷயம் வந்தாச்சா? ம்ம்ம்... நான் நினைச்சதை விட காஞ்சனாவும் கீதாவும் ரொம்ப க்ளோஸ் தான் போல இருக்கு..." என்றார் அர்ச்சனா இலகுவாக!

  

"இந்த மழுப்பல் எல்லாம் வேண்டாம்மா.... அவங்க க்ளோஸா இருந்தா இருந்துட்டு போகட்டும் எனக்கு பதில் சொல்லுங்க..."

  

"வாயாடி... சஞ்சீவுக்கு எப்போ கல்யாணம் பண்ற ஐடியால இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க தான் ஃபோன் செய்தேன்..."

  

"அதை தெரிஞ்சு கிட்டு என்ன செய்றதா பிளான்?"

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.