இவன் கிட்ட ஐடி எதுவும் இல்லை. யாரு என்னன்னு விசாரிச்சுட்டு சொல்றேன். உங்க மேல கோபமா இருக்க பழைய ஆளுங்களுக்கு தெரிஞ்சவனா கூட இருக்கலாம்,” என்றான் தென்றல்வாணன்
“கமான் இன்ஸ்பெக்டர், இந்த லேடி யாருன்னே எனக்கு தெரியாது. நீங்களாவே நியூ ஸ்டோரீஸ் எழுதாதீங்க,” என்றான் அந்த ஆல்-இன்-ஆல் கறுப்புக்காரன்!
“வாயை மூடுறா!” கான்ஸ்டபில் மிரட்டவும், மிரண்டுப் போய் வாயை மூடிக் கொண்டான் அவன்!
“பாட்டிம்மா, நீங்களும் ஜாக்கிரதையா இருங்க. கதவை எல்லாம் நல்லா மூடி வைங்க. யாரு வந்தாலும், என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு உள்ளே விடுங்க.”
“ஓ மை காட், பி.பி! யூ ஆர் ஹியர்?” புலம்புவதுப் போல சொன்னவனின் பேச்சு பர்வதம் பாட்டியை அவனை உற்றுப் பார்க்க வைத்தது. அவன் பக்கத்தில் சென்று அவனுடைய தாடையை பிடித்து மீண்டும் உற்றுப் பார்த்தார்.
“என்னை என்னன்னு கூப்பிட்ட?”
அவருடைய கேள்வி அவனுக்கு எதையோ உணர்த்தி இருக்க வேண்டும். விழித்தவன், சமாளித்துக் கொண்டுப் பேசினான்.
“என்னமோ சொன்னேன் பாட்டி. அந்தப் பொண்ணு அடிச்ச அடில முகம் எல்லாம் வலிக்குது. கையை எடுங்க.”
பாட்டியின் கை அவனுடைய வலதுக் காதை மென்மையாக மடித்துப் பார்த்தது. அங்கிருந்த பெரிய மச்சம் அவருடைய சந்தேகத்தை உறுதி செய்தது.
“ராஜா!!! ராஜா????? என்னப்பா இது? உன் வீட்டுக்குள்ளே இப்படி திருடன் மாதிரி வர வேலை எல்லாம் எதுக்கு?” பர்வதம் பாட்டி ப்ளாக் & வைட் பட அம்மா போல கண்ணீருடன் கேட்டார்.