பெண்பிள்ளைன்னா அடக்க ஒடுக்கமா தான் இருக்கனும்... அப்படி இல்லாம போனா இப்படி தான் பெத்தவங்களுக்கும், புகுந்த வீட்டுக்கும் கெட்டப் பெயர் வரும்... உன் அம்மா அப்பா ஏதோ விபத்தில இறந்ததா சொன்னீயே, அது நிஜமா இல்ல அவங்க உன்னால தற்கொலை செய்துக் கிட்டாங்களா?”
“போதும் நிறுத்துங்க...”
“என் கிட்ட இப்படி கத்தினா ஊர் வாயை மூட முடியுமா?”
கற்பகம் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டியாக குத்தி பாரதியின் மனதை புண் படுத்தி இருந்தது. ஆனாலும், முடிந்த அளவு மனதில் பட்ட காயத்தை வெளியே காட்டாமல்,
“நான் ஏன் அத்தை உங்க கிட்ட இதை எல்லாம் பேசிட்டு இருக்கேன்? எனக்கும் உங்களுக்கும் என்ன உறவு? நீங்க என் கணவரோட அம்மா, அவ்வளவு தானே? உங்க மகன் கிட்ட நான் எதையும் மறைக்கலை. உங்களுக்கு வேற கேள்வி இருந்தா அவர் கிட்டேயே கேளுங்க... என்னை கேள்வி கேட்கும் உரிமை அவருக்கு மட்டும் தான் இருக்கு...” என படபட என் பொரிந்து தள்ளிய பாரதி, அடுத்த வினாடி அந்த அறையில் இருந்து வெளியில் வந்தாள்.
கற்பகத்தின் முகத்தை கூட அவள் திரும்பி பார்க்கவில்லை.
கற்பகம் ஒரு வினாடி ஆடி தான் போனாள்...!!! ஆனால், பாரதியிடம் ரொம்பவும் அதிகமாக பேசிவிட்டோம் என்ற குற்ற உணர்வும் அவளுக்கு அதே நேரத்தில் தோன்றியது... இதை எல்லாம் பாரதி விவேக்கிடம் சொன்னால் அவன் என்ன செய்வானோ என்றும் கேள்வி அவளுக்குள் எழுந்தது!
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...