”ஆமாம் ஆனா இந்த முறை தப்பு என்னோடது, வேற வழியில்லாம அவள்கிட்டயும் அவள் அப்பாகிட்டயும் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்டு வந்தேன்”
”மன்னிப்பு கேட்கற அளவுக்கு தப்புன்னா ஓஹோ சரி சரி புரிஞ்சிப் போச்சி”
”என்ன புரிஞ்சது உனக்கு”
”வழக்கம் போல உன் முறைபொண்ணு உன்கிட்ட வந்து நின்னிருப்பா அவளைப் பார்த்ததும் உனக்கு உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடியிருக்கும், அதுல அவளை கட்டிப்பிடிச்சிருப்ப அவள் அய்யோ அம்மான்னு கூப்பாடு போட்டிருப்பா, அதுல உன் மாமனார் வரவும் நீ ரெண்டு பேர்கிட்டயும் மன்னிப்பு கேட்டிருப்ப இதானே”
”ஆமாம்டா அதேதான் என்ன இந்த முறை அவளை நான் உப்புமூட்டை ஏத்திக்கிட்டேன்”
”என்னது அடடே சூப்பரு, இப்படி அப்படின்னு ஒண்ணாயிட்டீங்க போல”
”அட போடா நீ ஒண்ணு ஆசைப்பட்டு ஏத்திக்கலை தானா வந்து ஒட்டிக்கிட்டா”
”சரி விடு ஒவ்வொரு பொண்ணுக்கு ஒவ்வொரு ஆசை உன் முறைபொண்ணுக்கு உன்மேல உப்புமூட்டை ஏறி விளையாடனும்னு ஆசை போல, எப்படியோ அவள் ஆசையை நிறைவேத்திட்டல்ல அப்புறம் என்ன”
”அதனால நான்தானே மன்னிப்பு கேட்டேன்”
”விடு நண்பா, சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் வருத்தப்படலாமா, இன்னும் எவ்வளவோ இருக்கு, புதைகுழின்னு தெரிஞ்சே காலை விட்டாச்சி உள்ள இழுக்குதுன்னு கதறி அழுதா மட்டும் மேல வரமுடியுமா முடியாதுல்ல, அழுதாலும் புரண்டாலும் நண்பா நீதான் வலியையும் வேதனையையும் அனுபவிக்கனும்”
”ம்ம்ம் நீ சொல்றதும் சரிதான்” என சொல்லிய நேரம் காவேரி வந்து நின்றாள் அவள்