(Reading time: 7 - 14 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்

  

30. மனம் விரும்புதே உன்னை... உன்னை...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ஹோட்டல் உள்ளே சென்று கீதாவை கண்டுப் பிடித்து, வீணாவும் இந்துவும் தங்களுக்கு வேண்டிய உணவை தேர்வு செய்து, ஆர்டர் செய்து முடித்த போது, இந்துவின் செல் ஃபோன் அழைத்தது. புது நம்பராக இருக்கவே யோசித்து விட்டு ஃபோனை எடுத்து,

  

"ஹலோ," என்றாள் இந்து.

  

"ஹலோ.... சாரி உங்களை டிஸ்டர்ப் பண்றேனா??? நான் வந்து... அன்னைக்கு என்னை மால்ல பார்த்தீங்க.... உங்க ஃபோன் கூட கொடுத்தீங்க..." மறுமுனையில் தயக்கத்துடன் ஒலித்தது அந்த பெண் குரல்.

  

அவள் சொன்ன விபரங்களில் இருந்து அவள் யார் என்று இந்துவிற்கு உடனே புரிந்துப் போனது!

  

"ஓ... ஞாபகம் இருக்கு... சொல்லுங்க..."

  

"வேற ஒன்னும் இல்லை... உங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லனும்ன்னு நினைச்சுட்டே இருந்தேன்... உங்க நம்பர் இருந்தது ஆனால் கூப்பிட தயக்கமா இருந்தது..."

  

"தேங்க்ஸ் எல்லாம் எதுக்குங்க.... அது தான் அன்னைக்கே சொன்னீங்களே..."

  

"யார் இந்து ஃபோன்ல?" என்றாள் வீணா பொறுமையின்றி.

  

இந்து அவளை அமைதியாக இருக்கும் படி சைகை காட்டிய போதும், வீணாவின் குரல் அந்த பக்கமும் கேட்டது போலும்,

  

"சாரிங்க... நீங்க பிஸியா இருக்கீங்க போல இருக்கு... நான் அப்புறம் பேசுறேன்..." என்றாள் அவள்.

  

"நான் தான் சாரி சொல்லனும்... இப்போ கொஞ்சம் பிஸி தான்... நானே உங்களை அப்புறமா கூப்பிடுறேனே...?"

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.