"ஒன்னும் செய்ய வேண்டாம்...!!! இப்போ நீங்க உங்க ஆஃபீஸ்ல தானே இருக்கனும்... இங்கே என்ன செஞ்சுட்டு இருக்கீங்க?"
"வேற என்ன செய்றது... இப்போ எல்லாம் எனக்கு ஒரு உரிமையும் இல்லாமல் போயிடுச்சே... ஒரு கார் வாங்கலாம்னு நினைச்சேன்... ஆனால் அது என் மஹாராணிக்கும் பிடிக்கனுமே... கார் வாங்கினதுக்கு அப்புறம் பிடிக்காமல் போனால் என்ன செய்றது? அது தான் கூடவே கூட்டிட்டு போய் வாங்கலாம்னு நினைச்சேன்...."
"எனக்கு எல்லா கலரும் பிடிக்கும் சஞ்சீவ்... உங்களுக்கு பிடிச்சதா செலக்ட் செய்ங்க..."
"ப்ளீஸ் இந்து... கார் வாங்க மட்டும் இல்லை... நாம ரெண்டுப பேரும் கொஞ்ச நேரம் ஒன்னா ஸ்பென்ட் பண்ணின மாதிரியும் இருக்கும்.... எந்த காலத்தில நீ உன்னோட ஈகோவை விட்டுக் கொடுத்து எனக்கு ஃபோன் செய்றது... நான் உன்னோட ஃபோன்ல பேசுறது!!!! எனக்கு மெசேஜ் அடிச்சு அடிச்சு கை எல்லாம் வலிக்குது..."
"ஓஹோ எனக்கு ஈகோவாக்கும்... அப்போ, உங்களைப் போல நீ பேசினா தான் நான் பேசுவேன்னு அடம் பிடிக்குறதுக்கு பேர் என்ன?"
"சரி அதெல்லாம் போகட்டும்... வா ஹூண்டாய் ஷோ ரூம் பக்கத்தில தான் இருக்கு...."
"போகலாமே..." என அதிகம் யோசிக்காமல் சம்மதித்தாள் இந்து.
ஷோரூமில் அவளுக்கு பிடித்த நிறம் என்று இல்லாது, சஞ்சீவிற்கும் அவளுக்கும் பிடித்த "மஹாராஜா ரெட்" கலரை தேர்வு செய்தாள் இந்து! பிறகு, சஞ்சீவுடன் கதைப் பேசிக் கொண்டே ஜூஸ் அருந்தி விட்டு வீட்டிற்கு அவள் வந்த போது, அர்ச்சனா ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவை பார்த்ததும் மதியம் நிலா சொன்ன செய்தி இந்துவின் நினைவில் வந்தது.
"சாரி ம்மா... நிலா சொன்னாங்க, நீங்க கூப்பிடீங்கன்னு... நான் அப்போவே உங்க நம்பர் கால் செய்து ட்ரை பண்ணி பார்த்தேன். உங்க நம்பர் பிஸியா இருந்தது..."