"சரிங்க... வைக்கிறேன்..."
செல் ஃபோனை எடுத்து கைப்பையின் உள்ளே வைத்து விட்டு,
"அன்னைக்கு சொன்னேனே மால்ல ஒரு பொண்ணுக்கு ஹெல்ப் செய்தேன்னு அவங்க தான் பேசினாங்க... தேங்க்ஸ் சொல்ல ஃபோன் செஞ்சாங்களாம்..."
"நாம மீட் பண்ற டைம்ல தான் சரியா அவங்களும் ஃப்ரீயா இருக்காங்க போல இருக்கு... அது எப்படியோ இருக்கட்டும் உன்னோட ஃபோனை கொஞ்ச நேரம் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வை. அப்போ தான் அடுத்து யாரும் கூப்பிட்டு டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க..." என்றாள் வீணா.
அதன் பின் மூன்று பேரும் தங்களின் வழக்கமான கிண்டல் கேலி பேச்சுக்களை தொடர்ந்தனர். சஞ்சீவ், கீதா வருவது தெரிந்த உடன், வராது சென்றதை சொல்லி கேலி செய்தாள் வீணா.
"நிஜமாவா? ஏன் அப்படி? " என்றாள் கீதா.
"என்னை கேட்டா எனக்கு என்ன தெரியும்? இந்து மேடத்தை தான் கேட்கனும்... ஒரு வேளை உங்க அண்ணி கூட பேச கூடாதுன்னு கண்டிஷன் போட்டிருக்காங்களோ என்னவோ...."
"வீணா..." என்று இந்து கோபமாக ஏதோ சொல்ல தொடங்கவும், அவளின் கையை பிடித்து தடுத்தாள் கீதா.
"என்ன இந்து... இதுக்கு எல்லாம் கோபப்பட்டுட்டு? அவள் உன்னை சீண்ட தான் சொல்றா....."
சிறிது நேரம் இந்துவை கேலி செய்து விட்டு, பின் தாங்கள் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த புது பிஸ்னஸ் பற்றியும் மூவரும் பேசினார்கள்.
"என்னோட ஐடியா இது தான் வீணா... நம்ம ஊரில இன்னும் நல்ல ஹான்ட்மேட்