(Reading time: 7 - 14 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"ம்ம்ம்ம்... அப்படி மரியாதையை கொடு..."

  

இப்படி தங்களின் வழக்கமான பேச்சுக்களோடு, உடனே செய்ய வேண்டிய வேலைகளையும் பட்டியலிட்டு வீணாவிடம் ஒப்படைத்து விட்டு, மூவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

  

🌼🌸❀✿🌷

   

ஹோட்டலில் இருந்து திரும்பி வந்த இந்துவை எதிர் கொண்ட நிலா,

  

"மேடம்... அர்ச்சனா மேடம் ரெண்டு தடவை ஃபோன் செஞ்சாங்க.... உங்க செல் ஃபோனை ரீச் பண்ண முடியலைன்னு சொன்னாங்க..." என்றாள்.

  

"ஓ! என்ன விஷயம்ன்னு சொன்னாங்களா?"

  

"இல்லை மேடம்... அவசரம் இல்லை... உங்களுக்குடைம் கிடைக்கும் போது ஃபோன் செய்ய சொன்னாங்க...."

  

"சரி தேங்க்ஸ் நிலா...."

  

உடனேயே, அம்மாவின் செல் ஃபோன் நம்பருக்கு 'கால்' போட்டாள் இந்து. ஆனால் அது பிஸியாக இருந்தது. சரி பின்னர் பேசிக் கொள்ளலாம் என முடிவு செய்து, தன் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினாள்.

  

ன்று மாலை, அலுவலகத்தில் இருந்து கிளம்பிய இந்து, அவளின் கார் அருகே சஞ்சீவை பார்த்து ஆச்சர்யப் பட்டாள்.

  

"ஹுஹும்ம்.... யோசிக்கனும், டைம் கொடுங்க... அப்படி இப்படின்னு டையலாக் எல்லாம் பேசிட்டு, இப்படி பார்க்கும் போதெல்லாம் இந்த மாதிரி லுக் விட்டால் நான் என்ன செய்றது..." என்றான் சஞ்சீவ் கண்களில் காதலும் குறும்பும் மின்ன!

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.