"பரவாயில்லைடா.... நீ தான் இப்போ எல்லாம் ரொம்ப பிஸி ஆச்சே...." அர்ச்சனாவின் பதிலில் கோபத்திற்கு பதில் கேலி தான் இருந்தது.
அம்மாவின் கேலியை புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட இந்து,
"என்ன விஷயம்மா?" என்றும் வினவினாள்.
"இந்து... இந்த விஷயத்தை நீ கொஞ்சம் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கனும்... நந்தினியும் நாளையில் இருந்து எஸ் எ இண்டஸ்ட்ரீஸ் வர போறா... உனக்கு கிழே தான் அவ வேலை செய்யப் போறா... அதெல்லாம் நான் தெளிவா அவக் கிட்ட பேசிட்டேன்... உனக்கும் ஹெல்ப்பா இருக்கும்..."
"என்ன அம்மா இது???? எனக்கு ஒரு ஹெல்ப்பும் தேவை இல்லை..." என்றாள் இந்து கோபத்துடன்.
"இப்படி சொன்னால் எப்படி இந்து?? அவளுக்கும் உன் போலவே நம்ம கம்பெனில உரிமை இருக்கு தானே?"
"மண்ணாங்கட்டி உரிமை...!!! இப்படி எல்லாம் அவ உங்க கிட்ட சொன்னாளாக்கும்..."
"தப்பு இந்து... அவ என்கிட்டே என் கம்பெனிக்கு வேலைக்கு வரட்டுமான்னு தான் கேட்டா... நான் தான், உனக்கு உரிமை இருக்கிற எஸ் எ இண்டஸ்ட்ரீஸ் இருக்கும் போது அதெல்லாம் எதுக்குன்னு சொன்னேன்..."
"அதெல்லாம் முடியாதும்மா... எனக்கு அவளை சுத்தமா பிடிக்கலை..."
"அதனால என்ன... கொஞ்சம் பிடிக்க கத்துக்கோ..." என்றால் அர்ச்சனா அமர்த்தலாக!
"அம்மா... என்னை இரிடேட் செய்யாதீங்க... அவ அங்கே வரகே கூடாது..."