(Reading time: 6 - 12 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

பவித்ராவுடைய மந்திரம் இந்த வீட்டிற்கு சரிபடாது உமா...”

  

ஏன்?”

  

பவித்ரா செம சூப்பர் குக்... அம்மா சமையலும் நல்லா இருக்கும் ஆனால் வெரைட்டி கம்மி... பவி அப்படி இல்லை, அம்மாவுடைய ட்ரெடிஷனல் சமையல் முதல் லேட்டஸ்ட் மிக்ஸ்ட் சமையல் வரை செஞ்சு அசத்துவா... அண்ணாக்கு அவளுடைய சமையல்ன்னா உயிர்... நடுராத்திரி ஆனால் கூட வீட்டுக்கு வந்து பவி சமைச்சதை அவ கையால் பரிமாறினால் தான் சாப்பிடுவார்...”

  

ஓ! ஹும்....”

  

என்ன இப்படி ஒரு பெருமூச்சு?”

  

என்ன தான் சொல்லு பாரதி, மிடில் க்ளாஸ் வாழ்க்கை தான் வாழ்க்கை... இங்கே இவ்வளவு பணம் இருந்து என்ன பிரயோஜனம் சொல்லு?”

  

அப்படி பொதுவா சொல்ல முடியாது உமா... பவி வீட்டில அம்மாவும் கொஞ்சம் புரிஞ்சு நடந்துப்பாங்க... எல்லோர் வீட்டிலேயும் அப்படி இல்லையே...”

  

அது என்னவோ சரி தான்...” என்ற உமா யோசனையுடன் பாரதியை பார்த்தாள், பின்,

  

ஏன் பாரதி, அத்தை நேத்து ரொம்ப கோபமா பேசினாங்களா?” எனக் கேட்டாள்.

  

பாரதிக்கு அந்த பேச்சை பேச விருப்பம் இருக்கவில்லை! எனவே பதில் சொல்லாமல் மௌனமாக நின்றாள்!

  

அத்தை சொன்னதை எல்லாம் மனசில வச்சுக்காதே பாரதி... அவங்க கெட்டவங்க இல்லை, நல்லவங்க தான்... கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் செய்து போ, அப்புறம் எல்லாம் சரி ஆகிடும். இந்த

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.