”டீச்சரா யாரை சொல்றீங்க” என கேட்க உதயமூர்த்தி உடனே
”கண்ணகி டீச்சர்” என சொல்ல ஹெச்எம்மின் முகம் பயத்தில் வெளுத்துவிட்டது, பதட்டத்துடன் பேசினார்
”என்னது கண்ணகி டீச்சரா ஏன் என்ன விசயம் அவங்களால ஏதாவது பிரச்சனையா” என பதட்டமாக கேட்க ஈஸ்வரன் அவரின் பயத்தைக்கண்டு வியந்தார்.
”என்னாச்சி ஒரு டீச்சரை பத்தி சொன்னதும் இப்படி பயப்படறீங்களே”
”அய்யோ உங்களுக்குத் தெரியாது அவங்களால எனக்கு தினம் தினம் பிரச்சனைதான்”
”அப்படியா“
”ஆமாம்” என சொல்ல ஈஸ்வரன் உதயமூர்த்தியை சந்தேகமாக பார்க்க உதயமூர்த்தியோ அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்துக் கொண்டு ஹெச் எம்மிடம்
”என்ன சார் இப்படி சொல்றீங்க, கண்ணகி டீச்சரால ஏகப்பட்ட மாணவர்களுக்கு நல்லது நடந்திருக்கே, உங்க பள்ளிக்கும் அவங்களால நல்ல பெயர் வந்திருக்கே, மாணவர்கள் வரத்தும் போன வருஷத்தை விட இந்த வருஷம் அதிகமா வந்திருக்குன்னு கேள்விப்பட்டேன், நீங்க என்னடான்னா இப்படி பேசறீங்க”
”நல்லது என்னவோ நடந்திருக்கு ஆனா கூடவே பிரச்சனையும் இல்லை வந்திருக்கு“
”நல்லது நடக்கனும்னா சில பிரச்சனைகள் வரத்தானே செய்யும்”
”சொன்னா உங்களுக்குப் புரியாது அவங்களை நீங்க பார்த்திருக்கீங்களா“
”இல்லை கேள்விப்பட்டு பார்க்க வந்தோம்”