(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 47 - பிந்து வினோத்

47. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

பாரதியிடம் தான் முகத்தை திருப்பிக் கொண்டதை மது பார்த்து விட்டாள் என்பதே கற்பகத்திற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது... மது அதைப் பற்றி நேரடியாக கேள்வி வேறு கேட்கவும்... அவளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் கற்பகம் தடுமாறினாள்... அதை புரிந்துக் கொண்டு, நரேந்திரன் மகளுக்கு பதில் சொன்னார்.

  

அது வேற ஒன்னும் இல்லை மது... உன் அண்ணா உங்க அம்மாவை விட்டுட்டு அண்ணியை மட்டும் ஸ்பெஷலா மஹாபலிபுரம் கூட்டிட்டுப் போறானேன்னு உங்க அம்மாக்கு கோபம்...”

  

அப்படியா என்ன?”

  

அவர் தான் சொல்றார்ன்னா நீ வேற அப்படியான்னு கேளு... அந்த பேச்சை விடு, உனக்கு ஏன் முகம் எல்லாம் இப்படி வாடிப் போய் இருக்கு?? இன்னைக்கு சீக்கிரம் சாப்பிட்டுட்டு தூங்கு... இரண்டு நாள் லீவ் தானே, ரெஸ்ட் எடு...” என்று பேச்சை மாற்றினாள் கற்பகம்.

  

புரிந்தோ, புரியாமலோ, “சரி ம்மா...” என்றாள் மது!

  

🌼🌸❀✿🌷

   

ணவனுடன் காரில் கிளம்பிய பின், முதல் சில நிமிடங்கள் உமா சொன்னதையும், கற்பகம் நடந்துக் கொண்ட விதத்தையும் நினைத்து குழம்பிக் கொண்டிருந்தாள் பாரதி... ஆனால் மெல்ல மெல்ல விவேக்கின் பேச்சில் அவள் கவனம் திரும்பவும், அவனை தவிர மற்றவர்கள் அனைவரையும் மறந்துப் போனாள்...

   

எப்போதும் போல பாரதியை சிரிக்க வைக்கும் விதமாக பேசியபடி விவேக் காரை ஒட்டவும், பாரதிக்கு கிட்டத்தட்ட அவர்கள் இருவரை தவிர மற்ற வெளி உலகம் மொத்தமாகவே மறந்துப் போனது.

  

அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வந்திருந்த அதே ரிசார்ட்டிற்கு வந்து சேர்ந்தப் போது, பின் மாலை பொழுதாக இருந்தது. பாரதியை காரிலேயே இருக்க சொல்லிவிட்டு, உள்ளே சென்று சாவியை வாங்கி வந்த விவேக்,

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.