“உங்களுக்கு தான் எல்லாத்துக்கும் ஒரு ஆள் வேணும், எனக்கு அதெல்லாம் தேவை இல்லை...” என்று அவனை கிண்டல் செய்துக் கொண்டே ஃபோனை வெளியில் எடுத்தவள்,
“பவி...” என கணவனிடம் சொல்லிவிட்டு தோழியிடம் பேசினாள்.
கடல் அருகில் சற்றே தள்ளி நின்று பாரதி பேசவும், விவேக், கடல் அலைகள் கால்களை நனைக்கும் வண்ணம் சென்று நின்றான். அங்கிருந்தபடி மனைவியையே கவனித்துக் கொண்டிருந்தவன், அவள் பேசி முடிக்கவும், ஒரு நொடியும் தாமதிக்காது, அவள் அருகில் சென்று மீண்டும் அவளின் கையைப் பிடித்து இழுத்து வந்தான்...
“விடுங்க... ஆனந்த்... என்ன இது...”
பதில் சொல்லாமல் விவேக் சிரிக்கவும்,
“நானே வரேன்னு தானே சொன்னேன்... நீங்க இப்போ எல்லாம் சரியே இல்லை...” என்றாள் அவள் போய் கோபத்துடன்!
“என்ன சரி இல்லை?”
“முன்னாடி எல்லாம் ரொம்ப நல்லவரா, ஜென்டில்மேனா இருந்தீங்க... இப்போ எல்லாம் அப்படி இல்லை...”
“ஹுரே! அப்பாடி..." என விவேக் ஏதோ விளையாட்டுப் போட்டியில் வென்று விட்டவனை போல அலறவும், பாரதி திகைத்து விழித்தாள்!
"என்ன பார்க்கிற? ஒரு வைஃப் புருஷனை ஜென்டில்மேன்னு சொல்ல கூடாது...” என அவளுக்கு சிம்பிளாக விளக்கம் கொடுத்து அவன் கண்ணடிக்கவும்,
“உங்களை...” என்று மீண்டும் பொய்யாக கோபப் பட்டாள் பாரதி!