காலையில் பசி வயிற்றைக் கிள்ள, உணவை ஆர்டர் செய்து, அவர்கள் அறைக்கே கொண்டு வர செய்து வாங்கி சாப்பிட்டார்கள்...
தலைக்கு குளித்து, விவேக்கிற்கு பிடித்ததுப் போல அவளின் நீண்ட கூந்தலை ஈரம் காய்வதற்காக விரித்து போட்டிருந்த பாரதியின் அருகில் நெருங்கி அமர்ந்தான் விவேக். அவனின் விரல்கள் தானாக அவளின் கூந்தலில் விளையாட,
“உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்னேனே ரதி, நீ அதைப் பத்தி கேட்கவே இல்லையே...” என்றான் மிருதுவானக் குரலில்!
“சாரி... கேட்க மறந்திட்டேன், சொல்லுங்க...”
“சாரி எல்லாம் எதுக்கு ரதி? அதைப் பத்தி எல்லாம் பேச நேத்து நமக்கு எங்கே டைம் இருந்துது?”
விவேக்கின் பேச்சின் காரணமாக வந்த முன் தின நிகழ்வுகளின் நினைவில் முகம் சூடானப் போதும்,
“பேச்சை மாத்தாதீங்க ஆனந்த்... என்ன விஷயம்ன்னு சொல்லுங்க...” என்றாள் அவள்.
“உன்னை கெஸ் செய்ய சொன்னால் நீ எப்படியும் கண்டுப்பிடிக்கப் போறது இல்ல..."
விவேக் கேலி செய்யவும், அவன் எதிர்பார்த்துப் போலவே பாரதி அவன் பக்கம் திரும்பி ஒருப் பார்வைப் பார்த்தாள்!
"ஓகே ஓகே முறைக்காதே... நானே சொல்றேன்...” என மெல்லிய ஸ்மைல் மின்ன சொன்னவன், எழுந்து சென்று எதையோ தேடி எடுத்து வந்தான்...
“உன் ஃபோன் கடலோடு போச்சு, என் ஃபோன் ஆல்மோஸ்ட் தண்ணியில் ஊறிப் போய்