தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 52 - பிந்து வினோத்
52. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
குழப்பத்திற்கு நடுவிலும் பாரதியின் மனம் விவேக்கிற்காக பரிந்தும் பேசியது.
அவர்கள் இரண்டுப் பேரின் கையிலும் செல்ஃபோன் இல்லை. ஒருவேளை அவனுக்கு அவசர வேலை வந்திருக்கலாம். பவித்ராவும், மதுவும் காலேஜில் இருந்து கிளம்பி சென்றதற்குப் பிறகு பராதியை தொடர்புக் கொள்ள அவனுக்கு வேறு நம்பரும் இல்லையே...
மனம் கொஞ்சம் தெளிவடைய,
“இல்லை உமா, வேண்டாம்... அவரை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம். நானே டாக்ஸி பிடிச்சு வந்துறேன்,” என்றாள் பாரதி!
“பத்திரம் பாரதி! காரை வேணா காலேஜுக்கு அனுப்பி வைக்கவா?” அக்கறையுடன் வினவினாள் உமா!
“வேண்டாம் உமா! அது லேட் ஆகும். நானே வந்துடுறேன். நோ ப்ராப்ளம்ஸ்...,” என்றாள் பாரதி ஈஸியாக!
🌼🌸❀✿🌷
சிட்டியை விட்டு விலகி இருந்த கல்லூரிக்கு டாக்சி வரும் வரை பொறுமையாக காத்திருந்து கிளம்பிய பாரதி, நேராக வீட்டிற்கு செல்லவில்லை. மாறாக, பிரபல ப்ரான்டட் மொபைல் ஃபோன்கள் விற்கும் கடைக்கு சென்றாள். அவளின் சம்பள பணம் அப்படியே வங்கி கணக்கில் தூங்கி கொண்டிருந்தபடியால், பணத்தை பற்றி கவலைப் படாமல் விவேக்கிற்கு ஒரு மொபைல் ஃபோன் வாங்கினாள். அவளுக்கும் மிதமான விலையில் பிடித்த ஒரு ஃபோனை வாங்கிவிட்டு, கிட்டத்தட்ட ஏழு மணி அளவில் வீட்டை அடைந்தாள்.
எதிரில் கண்ணில் பட்ட மதுவிடமும், உமாவிடமும் பேருக்கு பேசி விட்டு விவேக்கை தேடி சென்றாள். அவன் இன்னமும் அலுவலக அறையில் இருப்பதை புரிந்துக் கொண்டு நேராக அவனின் ஆஃபீஸ் அறைக்கே சென்றாள்!