(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

பல நாட்கள் பாரதி அவனுக்காக காத்திருக்கவும் செய்தாள்... ஆனால், லேட்டாக வந்தவன், அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் நேராக தூங்க போய் விடவும், என்ன ஏது என்று புரியாமல் திகைத்தாள்! அவனின் இரவு உணவை பற்றி கேட்டால், எரிந்து விழுந்தான்... அவள் முகத்தைப் பார்க்கவே பிடிக்காதவன் போல் அவளிடம் இருந்து விலகி விலகிச் சென்றான்.

    

பாரதி அவனுக்காக காத்திருக்காத நாட்களில், விவேக் லேட்டாக வந்தாலும் வீட்டில் இரவு உணவு உண்பதை பேச்சு வாக்கில் தெரிந்துக் கொண்டதும் பாரதிக்கு ஒன்றும் புரியவில்லை... விவேக்கின் நடவடிக்கைகளுக்கு பின் இருக்கும் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்து, யோசித்து அவளுக்கு தலை வலித்தது தான் மிச்சம்... ஆனால், அவள் காரணமாக அவன் இரவு உணவு உண்ணாமல் தூங்குவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே, அவனுக்காக இரவில் காத்திருப்பதை தவிர்க்க தொடங்கினாள்...

   

கல்லூரியில் வேறு அந்த வருடத்தின் முதல் செமஸ்டர் பரீட்சை நேரம் என்பதால், அவளுக்கும் வேலை அதிகமாக இருந்தது. இருந்தாலும், விவேக்கிடம் ஏற்பட்டிருக்கும் இந்த திடீர் விளக்கமில்லாத மாற்றங்கள் அவளை குழப்பிக் கொண்டே தான் இருந்தது...

   

என்ன ஆகி விட்டது அவனுக்கு??? ஏன் அவளிடம் இருந்து விலகிப் போகிறான்???

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

தொடரும்...

Go to Unnaruge naan irunthaal story main page

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.