மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 37 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
கடிகாரத்தில் நேரத்தை பார்த்து விட்டு தென்றல்வாணனை தேடிச் சென்றாள் சத்யா. அங்கே, கேஸ் ஃபைலை கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் தென்றல்வாணன்.
“சாப்பிட வாங்க!” சத்யா கணவனை அழைத்தாள்!
“வரேன்!” தென்றல்வாணன் நிமிர்ந்துக் கூட பார்க்காமல் சொன்னான்.
“சாப்பிடாம செய்ற அளவுக்கு என்ன கேஸ்? புது கேஸ் ஏதாவதா?”
“தேவை இல்லாம எல்லாத்துலேயும் மூக்கை நுழைக்குற சத்யா. அஹல்யாக்கு வீடு வாடகை விடுறது இந்த நேரத்துல தேவையா? டிபார்ட்மென்ட்ல யாரவது கேள்வி கேட்டா நான் என்ன சொல்றது?”
“Innocent until proven guilty! இதை கேள்வி பட்டுறுக்கீங்களா? நம்ம இந்திய சட்ட ஆணையத்தோட கொள்கை தான் அது. அஹல்யா தப்பு செய்திருக்கலாம்னு உங்களுக்கு சந்தேகம்! அதுக்காக நீங்களே அவங்களை குற்றவாளின்னு முடிவு செய்தா எப்படி?”
“இப்போன்னு இல்லை சத்யா, அஹல்யா பேருல பழைய கேஸ் வேற இருக்கு. கோல்ட் டிக்கர்! பணத்துக்காக ஆம்பளைங்களை ஏமாத்துறவ அவ!” தென்றல்வாணனுக்கு கடுப்புடன் சொன்னான்.
“நீங்க சொன்ன கேஸ் பத்தி எனக்கு தெரியாது. ஆனால் உங்களால ஒருத்தங்க குணத்தை ஓரளவுக்கு சரியா எடைப் போட முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்களே அஹல்யா கிட்ட பேசி இருக்கீங்க, அஹல்யா அப்படிப் பட்ட பொண்ணுன்னு உங்களுக்கு தோணுதா?” சத்யா சரளமாக கேட்டாள்.
“ஒருத்தர் முகத்தை வச்சு, பத்து நிமிஷம் பேசுறதை வச்சு எதுவும் சொல்ல முடியாது சத்யா!”
“சரி, நீங்க சொல்ற மாதிரி அஹல்யா ஏமாத்துறவங்களா இருந்தா, இந்த ஊருல இருக்க பணக்காரங்களைல தேடி போய் இருக்கனும்? டீச்சர் வேலை எதுக்கு? அவங்க கல்யாணம்