பேச்சுக் கொடுத்தாள் பாரதி.
“குட் மார்னிங் ஆனந்த்...”
“ம்ம்ம்ம்...”
“இந்த சாரீ எனக்கு நல்லா இருக்கா?”
“அது தான் ரூமில டிரெஸ்ஸிங் டேபிள் பக்கம் ஆள் உயர கண்ணாடி இருக்கே, அதில் பார்த்தால் தெரியப் போகுது, இதை எல்லாம் கேட்டு என்னை தொல்லை செய்யாதே...”
தற்போதைய வழக்கமாக அலுப்புடன், சற்றே வெறுப்பும் கடுப்புமாக அவன் சொல்லவும், மனம் புண் பட்ட போதும், அதை வெளியில் காட்டாமல்,
“எவ்வளவு நாள் இப்படி பிஸியா இருப்பீங்கன்னு சொல்லுங்க, அதுக்கு அப்புறம் வந்து நான் தொல்லை செய்றேன்...” என்றாள் பாரதி!
“உன்னைப் பொறுத்த வரை நான் எப்போதும் பிசி தான்...”
“ஏன்?”
“எனக்கு உன்னைப் பார்க்கவே பிடிக்கலை.”
“ஆனால் ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லி தானே கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க?”
“ஹும்... என் தப்பு தான்! ச்சே இந்த வீட்டில் ஒரு அஞ்சு நிமிஷம் நிம்மதியா வேலை செய்ய முடியலை...”
“போதும் போதும் நீங்க ஒன்னும் அலுத்துக்க வேண்டாம், நான் கிளம்புறேன்...”
அவனின் அறையில் இருந்து வெளியே வந்த பாரதி, அவனின் வார்த்தைகள் அலசி