என சொல்ல கண்ணகி அவளை சந்தேகமாக பார்த்தாள்
”என்ன சந்தேகமா பார்க்கற”
”உங்களுக்குள்ள என்ன ஓடுது”
”அம்மா தாயே சத்தியமா சொல்றேன் கடவுளே இறங்கி வந்து சொன்னாலும் நான் தாளாளரை மட்டும் விரும்ப மாட்டேன் போதுமா”
”இல்லை உனக்கு புடவை எடுக்கற அளவுக்கு போயிருக்காரே அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரியலையே”
”அந்தாளு மனசுல எது இருந்தாலும் எனக்கு கவலையில்லை ஆனா நான் தெளிவாயிருக்கேன்”
”எனக்கு இது சரியாப்படலை ஜாக்கிரதையா இரு”
”ம் புரியுது என்ன செய்றது முதலாளியா போயிட்டாப்ல கஷ்டமாயிருக்கு”
“வேணும்னா அந்த வேலையை விட்டுடு”
”அதை விட்டுட்டு என்ன செய்ய சொல்ற”
”காலேஜ்க்கு வா நான் ஒரு வேலை தரேன் உனக்கு செய்வியா”
“இதப்பார்றா காமெடியை உன் வேலையே இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கு, என்னிக்காவது பிரச்சனை பெரிசானா உன்னையே வெளிய அனுப்பிடுவாங்க நீ எனக்கு வேலை தரப்போறியா அதெல்லாம் வேணாம் நான் அங்கயே இருக்கேன்”
”இல்லை உன்னோட நல்லதுக்கு சொல்றேன்”